என் மலர்
நீங்கள் தேடியது "rahu ketu peyarchi"
- ராகுவும், கேதுவும், மற்ற கிரகங்களைப் போல முன்னோக்கிச் செல்வதில்லை.
- கிரகங்கள்தான் வாழ்வில் நாம் முன்னோக்கிச் செல்ல வழிகாட்டுகின்றன.
சுபஸ்ரீ விசுவாவசு வருடம் சித்திரை மாதம் 13-ந் தேதி (26.4.2025) சனிக்கிழமை மாலை 4.28 மணிக்கு, பூரட்டாதி நட்சத்திரம் 3-ம் பாதத்தில் கும்ப ராசிக்கு ராகுவும், உத்ரம் நட்சத்திரம் 1-ம் பாதத்தில் சிம்ம ராசிக்கு கேதுவும் பெயர்ச்சியாகிறார்கள்.

ராகுவும், கேதுவும், மற்ற கிரகங்களைப் போல முன்னோக்கிச் செல்வதில்லை, பின்னோக்கிச் செல்கின்றன. ஆனால் இந்த கிரகங்கள்தான் வாழ்வில் நாம் முன்னோக்கிச் செல்ல வழிகாட்டுகின்றன என்பதை அனுபவத்தில் உணரலாம்.
இப்பொழுது நடைபெறும் இந்த ராகு-கேது பெயர்ச்சியின் விளைவாக மேஷம், கன்னி, தனுசு ஆகிய ராசிக்காரர்கள் மிகுந்த நற்பலன்களைப் பெறுவர். மற்ற ராசிக்காரர்கள் ராகு-கேதுக்களுக்குரிய சிறப்பு வழிபாட்டையும், திசாபுத்திக்கேற்ற தெய்வ வழிபாடுகளையும் தேர்ந்தெடுத்து செய்தால் சந்தோஷத்தை நாளும் சந்திக்கலாம்.
சுமார் ஒன்றரை ஆண்டு காலம் கும்பத்தில் ராகுவும், சிம்மத்தில் கேதுவும் சஞ்சரிக்கப் போகிறார்கள். அப்பொழுது அதன் சார பலத்திற்கேற்ப உங்களுக்குரிய பலன்கள் வந்துசேரும்.
கடகத்திற்கு அஷ்டமத்து ராகு, கும்பத்திற்கு ஜென்ம ராகு, மகரத்திற்கு அஷ்டமத்து கேது, சிம்மத்திற்கு ஜென்ம கேது என்பதால் மிக கவனத்தோடு செயல்பட வேண்டும். மேற்கண்ட ராசிக்காரர்கள் நாக சாந்தி செய்துகொள்வது நல்லது.
11.5.2025 அன்று குரு பகவான், மிதுன ராசிக்குபெயர்ச்சியாகிச் செல்கிறார். அப்பொழுது குருவின் பார்வை துலாம், தனுசு, கும்பம் ஆகிய இடங்களில் பதிகின்றது. அதன் பிறகு 8.10.2025 அன்று கடகத்திற்கு செல்லும் குரு உச்சம் பெற்று, விருச்சிகம், மகரம், மீனம் ஆகிய ராசிகளைப் பார்க்கிறார். எனவே இந்த ராசிக்காரர்களுக்கு குரு பார்க்க கோடி நன்மை என்பதற்கேற்ப, நல்ல பலன்கள் இல்லம் தேடி வரும். தொட்ட காரியங்களில் வெற்றி ஏற்படும். வருமானம் உயரும்.
6.3.2026 அன்று சனிப்பெயர்ச்சியாகி மீனத்திற்கு செல்கிறார். இதன் விளைவாக மேஷத்திற்கு ஏழரைச் சனியும், சிம்மத்திற்கு அஷ்டமத்துச் சனியும் தொடங்குகிறது. விருச்சிகத்திற்கு அர்த்தாஷ்டமச் சனியும், கடகத்திற்கு அஷ்டமத்துச் சனியும் விலகுகிறது.
இந்த கிரகப் பெயர்ச்சிகளை அடிப்படையாக வைத்து ராகு-கேதுக்களுக்குரிய பலன் எழுதப்பட்டுள்ளது. சுமார் ஒன்றரை ஆண்டு காலம் நாக கிரகங்களால் யோகங்களை வரவழைத்துக் கொள்ள நாக தலங்களுக்குச் சென்றும் வழிபட்டு வரலாம்.
சுய ஜாதகத்தில் லக்னம் அல்லது சந்திரனுக்கு 2, 4, 6, 8, 12 ஆகிய இடங்களில், ராகு- கேதுக்கள் இருந்தால் திருமண வாழ்க்கை தடைப்படும். புத்திரப் பேறில் தாமதம் உண்டாகும். அப்படிப்பட்டவர்கள் தங்கள் சுய ஜாதகத்தில் பாதசார பலமறிந்து, நவாம்சத்தில் ராகு-கேதுக்களின் நிலையறிந்து யோகபலம் பெற்ற நாளில், உங்கள் ஜாதகத்திற்கு அனுகூலம் தரும் சர்ப்ப தலங்களுக்குச் சென்று வழிபட்டு வாருங்கள். அதன் மூலம் தடைக் கற்கள் படிக்கற்களாக மாறும்.
ராகு சஞ்சரிக்கும் பாதசார விவரம்
26.4.2025 முதல் 31.10.2025 வரை பூரட்டாதி நட்சத்திரக் காலில் ராகு (குரு சாரம்)
1.11.2025 முதல் 9.7.2026 வரை சதயம் நட்சத்திரக் காலில் ராகு (சுய சாரம்)
10.7.2026 முதல் 12.11.2026 வரை அவிட்டம் நட்சத்திரக் காலில் ராகு (செவ்வாய் சாரம்)
கேது சஞ்சரிக்கும் பாதசார விவரம்
26.4.2025 முதல் 27.6.2025 வரை உத்ரம் நட்சத்திரக் காலில் கேது (சூரிய சாரம்) 28.6.2025 முதல் 5.3.2026 வரை பூரம் நட்சத்திரக் காலில் கேது (சுக்ர சாரம்) 6.3.2026 முதல் 12.11.2026 வரை மகம் நட்சத்திரக் காலில் கேது (சுய சாரம்)
- சிம்மம், கன்னி, கும்பம், மீனம் ஆகிய 4 ராசிக்காரர்கள் பரிகார வழிபாடுகள் செய்வது நல்லது.
- திருமண முயற்சியில் இருப்பவர்களுக்கு திருமண யோகம் கைகூட பூஜை செய்யுங்கள்.
ராகு மற்றும் கேது பெயர்ச்சி 2023-ம் ஆண்டு வாக்கிய பஞ்சாங்கத்தின்படி நாளை (8-ந் தேதி) நிகழ உள்ளது. திருக்கணித பஞ்சாங்கத்தின்படி அக்டோபர் 30-ந் தேதி நடக்க உள்ளது என ஜோதிடர்கள் குறிப்பிடுகின்றனர்.
இந்த பெயர்ச்சியின் போது ராகு மீன ராசிக்கும், கேது கன்னி ராசிக்கும் பெயர்ச்சி ஆகின்றனர். திருக்கணித பஞ்சாங்கத்தின்படி 2025ம் ஆண்டு மே 18-ந் தேதி இரவு 7.35 மணி வரை இந்த கிரகங்கள் மேலே குறிப்பிட்டுள்ள ராசியில் சஞ்சரிக்கும். மற்ற கிரகங்களைப் போல் இல்லாமல் ராகுவும், கேதுவும் எப்போதும் பின்னோக்கி அதாவது வக்ர நிலையில் பயணிக்கக்கூடியவை. இவை சர்ப்ப கிரகங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இந்த சர்ப்ப கிரகங்களின் இடையில் மற்ற கிரகங்கள் அமைந்துவிட்டால் அதனை கால சர்ப்ப தோஷம் அல்லது யோகம் என்பார்கள். நாளை பிற்பகல் 3 மணி 36 நிமிடத்துக்கு ராகு, தான் இருந்த மேஷ ராசியில் இருந்து, மீன ராசிக்கு வருகின்றார்.
கேது, தான் இருந்த துலாம் ராசியில் இருந்து கால புருஷனுக்கு ஆறாம் ராசியான கன்னிராசிக்கு வருகிறார். ராகுவுக்கு இடம் தந்து குரு வலிமையுடன் இருப்பதால் ராகுவின் பாதிப்பு குறையும்.
அதுபோல் ராகுவின் எதிர் ராசியான கன்னி ராசியும் புதனின் சுபத்தன்மையை பொறுத்து கெடுபலன்களை குறைத்து கொள்ளும். இந்த ராகு-கேது பெயர்ச்சியை முன்னிட்டு நாளை சிறப்பு வழிபாடுகளும் சர்ப்ப சாந்தி பரிகாரங்களும் செய்து கொள்வது நல்லது. குறிப்பாக சிம்மம், கன்னி, கும்பம், மீனம் ஆகிய 4 ராசிக்காரர்கள் பரிகார வழிபாடுகள் செய்வது நல்லது. மற்ற ராசிக்காரர்கள் சாதாரண பூஜைகள் செய்யலாம்.
ராகு-கேது பெயர்ச்சி பாதிப்புகளில் இருந்து தற்காத்துக் கொள்ள அம்மன் கோவில்களில் உள்ள நாகப் பிரதிஷ்டைகளை வணங்கி வாருங்கள். அதுவே பரிகாரத்துக்கு போதுமானது. வேறு எந்த சிறப்பு பரிகார பூஜைகளும் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. பெரும்பாலும் இந்த முறை ராகு-கேது தோஷம் பெரும் பாதிப்பு செய்வதில்லை. மாறாக தன்னம்பிக்கை துணிச்சலை வளர்க்கும். எனவே கவலை தேவையில்லை.
சிம்மம்
இதுவரை ராகு ராசிக்கு 9ம் இடத்திலும், கேது 3ம் இடத்திலும் சஞ்சரித்து வந்தனர். தற்போது இந்த பெயர்ச்சி மூலம் ராகு 8-ம் இடத்திலும், கேது 2-ம் இடத்திலும் அமர்கின்றனர். இதன் காரணமாக பொதுவாக உங்களுக்கு கடன் தொல்லை அதிகரிக்கும். ஆரோக்கியத்தில் பிரச்சினை ஏற்படலாம். அஷ்டம ஸ்தானத்தில் ராகு அமர்வதோடு, ராசிக்கு 2ல் தன ஸ்தானத்தில் கேது இருப்பதால் உங்களின் வருவாய் குறையும். அதனால் வருமானம் குறைவதற்கும் வாய்ப்பு உண்டு. தேவையற்ற சிந்தனைகள், மன குழப்பங்கள் வரும். ஆனால் பனி போல அவை மறைந்து விடும். எனவே எந்த விஷயத்தையும், செலவையும் திட்டமிட்டு செய்வது நல்லது. குறிப்பாக உடல் நலனில் அக்கறை செலுத்துங்கள்.
கன்னி
இந்த ராகு கேது பெயர்ச்சியினால் கன்னி ராசியிலேயே கேது பகவான் அமர்கிறார். 7-ம் இடத்தில் ராகு அமர உள்ளார்.
லக்கினத்தில் கேதுவும், 7-ல் ராகு அமர்வதால் திருமண வாழ்க்கையில் சிறு, சிறு சலசலப்பு வரலாம். திருமண முயற்சியில் இருப்பவர்களுக்கு திருமண யோகம் கைகூட பூஜை செய்யுங்கள். மேலும் கன்னி ராசியினரின் வளர்ச்சி தடைப்படுவதற்கான வாய்ப்புகள் உண்டு. உங்கள் முன்னேற்றத்தை தடுக்க சிலர் கங்கனம் கட்டிக் கொண்டு வருவார்கள். கவனமாக இருங்கள். நீங்கள் எடுக்கும் முடிவு, செயல்களில் உங்களின் சிந்தனை நிலையாக இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு 2ம் இடத்தில் ராகுவும், 8ல் கேதுவும் இந்த பெயர்ச்சியின் போது அமையப் பெறுவார்கள்.
இரண்டாம் இடத்தில் ராகு, 8ல் கேது அமர்வதால் உங்களின் குடும்ப வாழ்க்கையில் இன்பமும், துன்பமும் மாறி மாறி வரும். மேலும் தற்போது ஜென்ம சனி நடந்து கொண்டிருப்பதால் கூடுதல் கவனத்துடன் இருக்கவும். மேலும் குடும்ப விருத்தி அடைவதில் கவனம் தேவை.
மீனம்
மீன ராசியிலேயே ராகு வருவதும், கேது 7ம் இடத்தில் அமர்வதாலும் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய காலமாக இருக்கும். திருமண முயற்சியில் இருப்பவர்களுக்கு கால தாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. புத்திர தோஷம், சொத்து தகராறு போன்ற விஷயங்கள் வர வாய்ப்புள்ளதால் சற்று பொறுமையை கையாழுங்கள். எதிர்மறையான எண்ணங்களைத் தவிர்த்து, குடும்ப உறுப்பினர்களை அனுசரித்து நடப்பது அவசியம்.
ராகு-கேது பெயர்ச்சி நல்ல இடங்களில் ஏற்பட்டாலும் சரி, கெட்ட இடங்களில் மாறினாலும் சரி. அதற்கு பயப்பட தேவையில்லை. குண்டலினி சக்தியை தன்னுள்கொண்டு ஜீவ ஜோதியான சித்தர்களின் ஜீவ சமாதிகளில் சென்று வழிபட்டால் போதும். ராகு-கேது பெயர்ச்சி பலனை உங்களுக்கு இனிய பெயர்ச்சியாக மாற்றுங்கள்.
- நவகிரகங்களுக்கு நேற்று சிறப்பு யாகமும் அபிஷேக ஆராதனைகளும் நடைபெற்றது.
- சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி ராகு கேது உள்ளிட்ட நவகிரகங்கள் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.
உடுமலை:
உலக இயக்கம் மற்றும் நமது உடலோடு தொடர்பு கொண்டு தலையெழுத்தை தீர்மானிப்பது நவகிரகங்கள். அதில் நிழல் கிரகங்களாக ராகு மற்றும் கேது பகவான் திகழ்கிறார்கள்.இந்த இரண்டு கிரகங்களும் ஒவ்வொரு ராசியிலும் ஒன்றரை ஆண்டுகள் அதாவது 18 மாதங்கள் சஞ்சரித்து அவரவர் திசை மற்றும் தசா புத்திக்கு ஏற்றவாறு பலன்களை அளித்து வருகிறார்கள்.
அந்த வகையில் நேற்று மாலை 3.40 மணிக்கு ராகு கேது பெயர்ச்சி நடந்தது.மேஷ ராசியில் சஞ்சரித்து வந்த ராகு பகவான் மீன ராசிக்கும், துலாம் ராசியில் சஞ்சரித்து வந்த கேது பகவான் கன்னி ராசிக்கும் இடம் பெயர்ந்தனர். இதை முன்னிட்டு நவகிரகங்களுக்கு நேற்று சிறப்பு யாகமும் அபிஷேக ஆராதனைகளும் நடைபெற்றது.அதைத் தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி ராகு கேது உள்ளிட்ட நவகிரகங்கள் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.
இதையடுத்து பரிகாரம் செய்ய வேண்டிய ராசியினர் ராகு மற்றும் கேது பகவானுக்கு தங்களால் இயன்ற பொருட்களை அளித்து வழிபாடு செய்தனர். ராகு கேது பெயர்ச்சியை முன்னிட்டு உடுமலை பிரசன்ன விநாயகர் கோவில், தில்லைநகர் ரத்தின லிங்கேஸ்வரர் கோவில்,குட்டை திடலில் உள்ள சித்தி புத்தி விநாயகர் கோவில் உள்ளிட்ட உடுமலை மற்றும் தளி பகுதி கோவில்களில் சிறப்பு பூஜை மற்றும் வழிபாடு நடைபெற்றது.இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
ப்ரணமாமி ஸதா ராஹும் ஸர்பாகாரம் கிரீடினம்
ஸைம்ஹிகேயம் கராளாஸ்யாம் பக்தானாமபயப் ரதம்
ராஹும் சதுர்புஜம் சர்மஸூல கட்கவராங்கிதம்
க்ருஷ்ணமால்யாம்பரதரம் க்ருஷ்ணகந்தானுலே பனம்
கோமேதகவிபூஷம் சவிசித்ர மகுடான்விதம்
க்ருஷ்ணஸிம்ஹரதம் மேரும் யாந்தம் சைவாப்ரத க்ஷிணம்.
பொதுப்பொருள்: கிரீடத்தை தரிப்பவரே, நாகத்தின் வடிவை உடையவரே, ஸிம்ஹிகையின் புதல்வரே, ராகு பகவானே நமஸ்காரம். பயங்கரமான முகத்தைக் கொண்டிருந்தாலும் பக்தர்களுக்கு பயமின்மையை அளிப்பவரே, கேடயம், சூலம், கத்தி இவற்றை மூன்று கரங்களிலும் ஒரு கரம் வரத ஹஸ்தமாகவும் கொண்டவரே, கருத்த மாலைகள், வஸ்திரங்களைத் தரிப்பவரே, கருத்த சந்தனத்தை உடலெங்கும் பூசியவரே, கோமேதகம் எனும் ரத்தினத்தால் அலங்கரிக்கப்பட்டவரே, விந்தையான மகுடம் சூடியவரே, கருமை நிற சிம்ம ரதத்தில் பவனி வருபவரே, மேருமலையை அப்பிரதட்சணமாக சுற்றி வருபவரே, ராகு பகவானே நமஸ்காரம்.
கேது தியானம் :
தூம்ரவர்ணம் த்வஜாகாரம் கதாவரகரத்வயம்
சித்ராம்பரதரம் கேதும் சித்ரகந்தானுலேபனம்
வைடூர்யாபரணம் சைவ வைடூர்ய மகுடோஜ் வலம்
சித்ரம் கபோதமாருஹ்ய மேரும் யாந்தமதக்ஷிணம்
கேதும் கராளவதனம் சித்ரவர்ணம் கிரிடீனம்
ப்ரணமாமி ஸதாதேவம் த்வஜாகாரம் க்ரஹேஸ்வரம்
பொதுப்பொருள்: செங்கருப்பு நிறம் கொண்டவரே, கொடி போன்ற உருவமுடையவரே, கதையை ஏந்தியவரே, வரமளிக்கும் முத்திரை தரித்தவரே, கேது பகவானே நமஸ்காரம். விசித்திரமான வஸ்திரம் அணிந்தவரே, விசித்திரமாக சந்தனம் பூசியவரே, வைடூர்யங்களால் செய்த ஆபரணங்களைத் தரித்தவரே, பல வண்ணம் கொண்ட புறாவை வாகனமாகக் கொண்டவரே, மேருமலையை அப்பிரதட்சணமாகச் சுற்றுபவரே, கேதுபகவானே நமஸ்காரம்.