ஆன்மிகம்
ஆகாசராயருக்கு மண் குதிரைகளை சுமந்து வந்து பக்தர்கள் நேர்த்திக்கடன்
அவினாசி லிங்கேசுவரர் கோவில் தேர்த்திருவிழாவை முன்னிட்டு அவினாசி மங்கலம் ரோட்டில் உள்ள ஊர்க்காவல் தெய்வமான ஆகாசராயருக்கு மண்குதிரைகளை சுமந்துவந்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினார்கள்.
திருப்பூர் மாவட்டம் அவினாசி லிங்கேசுவரர் கோவில் தேர்த்திருவிழா வருகிற 30-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கு கிறது. விழாவை முன்னிட்டு அவினாசி அருகே உள்ள ராயம்பாளையத்திலிருந்து மங்கலம் ரோட்டில் உள்ள ஊர்க்காவல் தெய்வமான ஆகாசராயர் கோவிலுக்கு பக்தர்கள் 3 மண்குதிரைகளை சுமந்து வந்து நேர்த்திக்கடனை செலுத்தினர். முன்னதாக மண்குதிரைகள் மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பின்னர் சிறப்பு பூஜைகள் வழிபாடுகள் நடைபெற்றது.
காலை முதல் விரதம் இருந்த பக்தர்கள் தாரை தப்பட்டை முழங்க பட்டாசுகள் வெடித்து மண் குதிரைகளை சுமந்து கொண்டு 6 கிலோமீட்டர் தூரம் நடந்து வந்தனர். வழி நெடுகிலும் குதிரைகளை சுமந்து வந்தவர்களின் கால்களில் தண்ணீர் ஊற்றி பொதுமக்கள் வரவேற்றனர்.
பின்னர் ஆகாசராயருக்கு சிறப்பு பூஜைகள் செய்து நேர்த்திக்கடனை செலுத்தினர். தொடர்ந்து அபிஷேகம் அலங்காரம், மகாதீபாராதனைகள் நடைபெற்றது. பொங்கல் வைத்து அனைவருக்கும் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
காலை முதல் விரதம் இருந்த பக்தர்கள் தாரை தப்பட்டை முழங்க பட்டாசுகள் வெடித்து மண் குதிரைகளை சுமந்து கொண்டு 6 கிலோமீட்டர் தூரம் நடந்து வந்தனர். வழி நெடுகிலும் குதிரைகளை சுமந்து வந்தவர்களின் கால்களில் தண்ணீர் ஊற்றி பொதுமக்கள் வரவேற்றனர்.
பின்னர் ஆகாசராயருக்கு சிறப்பு பூஜைகள் செய்து நேர்த்திக்கடனை செலுத்தினர். தொடர்ந்து அபிஷேகம் அலங்காரம், மகாதீபாராதனைகள் நடைபெற்றது. பொங்கல் வைத்து அனைவருக்கும் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.