ஆன்மிகம்
விழாவையொட்டி பெருமாள் அனுமார் வாகனத்தில் எழுந்தருளிய போது எடுத்தபடம்.

சீத்தாகேம்ப் பிரசன்ன வெங்கடாஜலபதி கோவிலில் பிரம்மோற்சவ விழா

Published On 2017-03-24 05:02 GMT   |   Update On 2017-03-24 05:02 GMT
சீத்தாகேம்ப் பிரசன்ன வெங்கடாஜலபதி கோவிலில் பிரம்மோற்சவ விழா நாட்களில் சாமி பிரதிஷ்டை, சுதர்சன பகவான் வீதியுலா வருதல், யாகசாலை பூஜைகள் ஆகியவை நடந்தன.
மும்பை சீத்தாகேம்பில் உள்ள ஸ்ரீபிரசன்ன வெங்கடாஜலபதி கோவிலின் 29-ம் ஆண்டு பிரம்மோற்சவ விழா கடந்த 14-ந்தேதி முதல் தொடங்கி நடந்தது. இதையொட்டி விழா நாட்களில் சாமி பிரதிஷ்டை, சுதர்சன பகவான் வீதியுலா வருதல், கொடியேற்றம், யாகசாலை பூஜைகள் ஆகியவை நடந்தன. 19-ந் தேதி கோவிலில் சாமி திருக்கல்யாண உற்சவம் நடந்தது.

20-ந்தேதி சாமி சேஷ வாகனத்திலும், 21-ந் தேதி கருட வாகனத்திலும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நேற்றுமுன்தினம் பெருமாள் அனுமார் வாகனத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். நேற்று இரவு நடந்த கொடி இறக்கத்துடன் விழா நிறைவு பெற்றது.

Similar News