ஆன்மிகம்

நித்யகல்யாண பெருமாள் கோவிலில் கருட சேவை உற்சவம்

Published On 2017-03-08 08:06 GMT   |   Update On 2017-03-08 08:06 GMT
காரைக்காலில் உள்ள பிரசித்தி பெற்ற நித்யகல்யாண பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடைபெற்றுவருகிறது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.
காரைக்காலில் உள்ள பிரசித்தி பெற்ற நித்யகல்யாண பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடைபெற்றுவருகிறது. விழாவில் கருட சேவை உற்சவம் நடந்தது. முன்னதாக பெருமாளுக்கு சிறப்பு ஆராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.

விழாவில் நேற்று மாலை திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது. 10-ந் தேதி காலை தேரோட்டமும், தொடர்ந்து சந்திரபுஷ்கரணி தீர்த்தத்தில் தீர்த்தவாரியும் நடக்கிறது. 12-ந் தேதி பட்டினச்சேரியில் நடைபெறும் மாசிமக தீர்த்தவாரிக்கு திருக்கண்ணபுரம் பெருமாளுடன் எழுந்தருளும் நிகழ்ச்சியும், 14-ந் தேதி இரவு தெப்ப உற்சவமும், 15-ந் தேதி மாலை புஷ்பபல்லக்கு நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

Similar News