ஆன்மிகம்

ஈரோட்டுக்கு வந்த ஆதியோகி சிவன் சிலைக்கு சிறப்பு பூஜை

Published On 2017-02-16 07:38 GMT   |   Update On 2017-02-16 07:38 GMT
ஈரோடு பெரிய மாரியம்மன் கோவில் அருகில் பக்தர்கள் பார்வைக்காக வைக்கப்பட்டு இருந்த ஆதியோகி சிவன் சிலைக்கு பக்தர்கள் சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர்.
ஈஷா யோகா மையம் சார்பில் கோவை மாவட்டம் வெள்ளியங்கிரி மலைப்பகுதியில் 112 அடி உயர ஆதியோகி முகம் கொண்ட சிவன் சிலை வருகிற 24-ந் தேதி (வெள்ளிக்கிழமை) மகா சிவராத்திரி அன்று பிரதிஷ்டை செய்யப்படுகிறது.

இந்த சிலையின் மாதிரி சிலை 9 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலை தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு ஊர்வலமாக கொண்டு செல்லப்படுகிறது. இந்த நிலையில் ஆதியோகி சிவன் சிலை வேன் மூலம் நேற்று ஈரோட்டுக்கு கொண்டு வரப்பட்டது.

ஈரோடு பெரிய மாரியம்மன் கோவில் அருகில் பக்தர்கள் பார்வைக்காக வைக்கப்பட்டு இருந்த ஆதியோகி சிவன் சிலைக்கு பக்தர்கள் சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர். பின்னர் ஈரோட்டில் உள்ள முக்கிய வீதிகள் வழியாக சிவன் சிலை ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது.

Similar News