ஆன்மிகம்

சிவலிங்க பூஜையும்.. பலனும்..

Published On 2017-02-13 10:14 GMT   |   Update On 2017-02-13 10:14 GMT
சிவபெருமானை பூஜை செய்து வழிபாடு செய்தால் எண்ணற்ற பலன்கள் கிடைக்கும். அந்த வகையில் எந்த வகை லிங்கத்தை வழிபாடு செய்தால் என்ன பலன் கிடைக்கும் என்பதை பார்க்கலாம்.
ரத்தினத்தால் ஆன சிவலிங்கத்தைப் பூஜை செய்து வழிபட்டால், லட்சுமி கடாட்சம் கிட்டும். செல்வம் பெருகும்.

உலோகத்தால் ஆன சிவலிங்கத்தை வழிபட்டால், துன்பம் நீங்கும். எதிர்ப்புகள் அகலும்.

பவள லிங்கத்தை வழிபட்டால் நோய் தீரும். நட்பு பெருகும்.

கல்லினால் ஆன லிங்கத்தை வழிபட்டால், ஆற்றல் கூடும். கல்வி கலைகளில் தேர்ச்சி கிட்டும். அரும்பெரும் சக்தி உண்டாகும்.

Similar News