ஆன்மிகம்

திருப்பரங்குன்றம் முருகனின் முதல்படை வீடாக திகழ காரணம்

Published On 2017-02-13 10:03 GMT   |   Update On 2017-02-13 10:03 GMT
முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில், திருப்பரங்குன்றம்தான் முதல் வீடு. திருப்பரங்குன்றம் முருகனின் முதல்படை வீடாக திகழ என்ன காரணம் என்பதை பார்க்கலாம்.
முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில், திருப்பரங்குன்றம்தான் முதல் வீடு. சூரனை வதம் செய்ததும், திருச்செந்தூரில் தங்கியிருந்தார் முருகப்பெருமான். அப்போது அங்கு வந்த இந்திரன், தனது மகளான தேவ சேனாவை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று முருகப்பெருமானிடம் வேண்டினான். முருகப்பெருமானும் அதற்கு இசைந்தார். மேலும் திருமணத்தை திருப்பரங்குன்றத்தில் வைத்துக்கொள்ளலாம் என்றும் கூறினார்.

திருமணத்திற்கு வந்திருந்த சிவபெருமான், முருகனுக்கு முதன்மை ஸ்தானத்தை திருப்பரங்குன்றத்தில் வைத்துக் கொடுத்தார். இதனால் திருப்பரங்குன்றம் முருகனின் முதல்படை வீடாக திகழ்கிறது.

Similar News