ஆன்மிகம்

கொப்பம்பட்டி சிவன் கோவிலில் புதிய ஐயப்ப சுவாமி சிலை பிரதிஷ்டை

Published On 2016-12-05 05:39 GMT   |   Update On 2016-12-05 05:39 GMT
கொப்பம்பட்டி சிவன் கோவிலில் புதிய ஐயப்ப சுவாமி சிலை ஐயப்ப பக்தர்களால் புதிதாக செய்யப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது.
திருச்சி மாவட்டம் உப்பிலியபுரம் அருகே உள்ள சிவன் கோவிலில் ஐயப்ப சுவாமி சிலை, ஐயப்ப பக்தர்களால் புதிதாக செய்யப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது. முன்னதாக சிவனுக்கு அபிஷேகமும், தீபாராதனையும் நடைபெற்றது.

அதனை தொடர்ந்து ஐயப்ப சுவாமியின் புதிய சிலை ஏற்கனவே இருந்த இடத்தில் வைக்கப்பட்டு, மலர்களாலும் வண்ண மின்விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது. ஐயப்ப பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் புடைசூழ, ஐயப்ப சுவாமியின் கண்கள் திறக்கப்பட்டு, பிரதிஷ்டை செய்யப்பட்டு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

பின்னர் அன்னதானம் நடைபெற்றது. இதில் அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Similar News