ஆன்மிகம்

இறையூர் திரவுபதியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

Published On 2016-12-05 05:06 GMT   |   Update On 2016-12-05 05:06 GMT
இறையூர் திரவுபதியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
பெண்ணாடம் அடுத்த இறையூரில் திரவுபதியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த யாகசாலையில் கணபதி ஹோமம், அனுக்ஞை, வாஸ்து சாந்தி, அங்குரார்ப்பணம் நடைபெற்றது. பின்னர் நேற்று காலையில் யாகசாலை பூஜை, பூர்ணாகுதி, கடம் புறப்பாடு நடைபெற்றது.

தொடர்ந்து மேள, தாளங்கள் முழங்க யாகசாலையில் வைத்து பூஜை செய்யப்பட்ட புனித நீர் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு கோவில் கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் செல்வ விநாயகர் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கும் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

பின்னர் இரவு சாமி வீதியுலா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, சாமி தரிசனம் செய்தனர். விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.

Similar News