ஆன்மிகம்

குலசேகரன்பட்டணம் முத்தாரம்மன் கோவிலில் ருத்ர பூஜை

Published On 2016-11-24 04:18 GMT   |   Update On 2016-11-24 04:19 GMT
உடன்குடி குலசேகரன்பட்டணம் முத்தாரம்மன் கோவிலில் ருத்ர பூஜை நடந்தது.
உடன்குடி வாழும் கலை மையம் சார்பில் குலசேகரன்பட்டணம் முத்தாரம்மன் கோவிலில் உள்ள சிவசௌந்திரபாண்டி கலையரங்கத்தில் ருத்ர பூஜை நடந்தது. கணபதி பூஜை, கலச பூஜை,சிவலிங்க பூஜை ஆகியவை நடத்தப்பட்டு வேதங்கள் ஓதப்பட்டு சிவ வழிபாட்டு மந்திரத்துடன் 108 திருநாமங்கள் உச்சாடனம் செய்யப்பட்டது.தொடர்ந்து ஸ்ரீ ருத்ரம் ஓதப்பட்டு நீர், பால், தயிர், நெய், தேன் போன்ற 11 வகை பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.

பூஜ்ய ஸ்ரீ ரவிசங்கர்ஜி ஆசியுடன் சாத்வி ஜெய சந்திரிகா முன்னிலையில் ருத்ர பூஜை நடந்தது. இதற்கான ஏற்பாடுகளையும் உடன்குடி வாழும் கலை மையத்தினர் செய்திருந்தனர்.

Similar News