ஆன்மிகம்

தீர்த்தவாரி செய்வதால் கிடைக்கும் பலன்கள்

Published On 2016-10-21 07:36 GMT   |   Update On 2016-10-21 07:35 GMT
தீர்த்தவாரி செய்பவர்களுக்கு நல்ல உடல் ஆரோக்கியமும் முழுமையான சிறப்பான வாழ்க்கையும் பகவானுடைய ஆசியால் நிச்சயமாக அமைகின்றது.
எல்லா மாதங்களிலும், சுவாதி நட்சத்திரத்தன்று இந்த நரசிம்மரை மக்கள் வழிபடுகிறார்கள். சுவாதி நட்சத்திரம் ஸ்ரீநரசிம்மருடைய அவதார திருநட்சத்திரம். அன்று சிறப்பு திருமஞ்சனம், பூஜைகள் முதலியன நடைபெறுகின்றன. ஸ்ரீசுதர்சன ஹோமம், தன்வந்திரி ஹோமமும் நடைபெறுகின்றன.

புரட்டாசி மாதத்தில் எல்லா சனிக்கிழமைகளிலும் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. ஸ்ரீநரசிம்ம ஜெயந்தி உற்சவம், 3-வது சனிக்கிழமை பூஜையையும், இத்திருக்கோவிலில் மிகச் சிறப்பான விழாக்களாக கொண்டாடப்படுகின்றன.

மற்றொரு சிறப்பான விழாவாக பெண்ணையாறு பூஜை பொங்கல் பண்டிகைக்கு பிறகு வரும் 5-ம் நாள் (சுவாதி நட்சத்திரம்) அன்று கொண்டாடப்படுகிறது.

எல்லா மாதங்களிலும் சுவாதி நட்சத்திரத்தன்று சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. அக்டோபர் மாதத்தில் நவராத்திரி உற்சவம் கொண்டாடப்படுகிறது. 9-ம் நாள் சிறப்பாக விசேஷ ஹோமம் செய்யப்படுகிறது. உற்சவமூர்த்தி ஸ்ரீநரசிம்மருடைய புறப்பாடு (1கி.மீ. தூரத்தில் உள்ள தென்பெண்ணை ஆற்றில் தீர்த்தவாரி உற்சவம் தை (தமிழ்) மாதம் 5-ம் நாள் நடைபெறும்.

எவர் ஒருவர் இங்கு வந்து எம்பெருமானை வணங்கி அதே நாளில் தீர்த்தவாரி செய்கிறார்களோ அவர்களுக்கு நல்ல உடல் ஆரோக்கியமும் முழுமையான சிறப்பான வாழ்க்கையும் பகவானுடைய ஆசியால் நிச்சயமாக அமைகின்றது.

Similar News