ஆன்மிகம்

பதிமூன்று, பதினான்கு முக ருத்ராட்சை பலன்கள்

Published On 2016-10-18 07:59 GMT   |   Update On 2016-10-18 07:59 GMT
பதிமூன்று, பதினான்கு முக ருத்ராட்சை பயன்படுத்துவதால் கிடைக்கும் பலன்கள் என்னவென்று கீழே பார்க்கலாம்.
பதிமூன்று முக ருத்ராட்சை அதிர்ஷ்டத்திற்காக அணியப்படுகிறது. இந்த ருத்ராட்சை விஷ்வ தேவர்களை குறிக்கிறது. “ஓம் ஹ்ரீம் நமஹ” என்பதே இந்த ருத்ராட்சையின் மந்திரமாகும்.

பதினான்கு முக ருத்ராட்சையும் சிவபெருமானையே குறிக்கும். இந்த ருத்ராட்சை உங்கள் நெற்றியை தொடுமாறு அணிய வேண்டும். பாவங்கள் நீங்க இதனை அணியலாம். இந்த ருத்ராட்சை உங்கள் “ஓம் நமஹ” என்பதே இந்த ருத்ராட்சையின் மந்திரமாகும்.

பொதுவில் ருத்ராட்சை மணிகள் தங்களை சுற்றியுள்ள வெப்பத்தை கிரகித்துக் கொண்டு சுற்றுப்புறத்தினை குளிர்விக்கும் தன்மை உடையவை. இதனை உடலில் அணிவதால் குளிர்ச்சியாகும்.

Similar News