ஆன்மிகம்

கோபுரம் பார்த்தால் பாவம் தீரும்

Published On 2016-10-17 08:20 GMT   |   Update On 2016-10-17 08:20 GMT
கோவில் செல்லும் போது சில நடைமுறைகளை பின்பற்ற வேண்டும். அவை என்னவென்று கீழே பார்க்கலாம்.
கோவிலுக்கு செல்லும்போது ஆடம்பரமற்ற தன்மையுடன் செல்ல வேண்டும். மணமில்லாத மலர்களை கடவுளுக்கு சமர்ப்பிக்கக் கூடாது. வேறு காரியங்களுக்கு வாங்கிய பொருட்களை இறைவனுக்கு அர்ப்பணிக்கக் கூடாது. கோவிலுக்குள் பரம்பொருளின் பெரும் புகழைத் தவிர வேறு ஏதும் பேசக் கூடாது. அர்ச்சகர்கள் தரும் விபூதி, குங்குமம் பிரசாதங்களை கீழே சிந்திவிடக் கூடாது. கோவிலுக்குள் ஓடுதல், சிரித்தல், அதிர்ந்து நடத்தல், சினந்து பேசுதல் கூடாது. அங்கு இறை சிந்தனையோடு இருக்க வேண்டும்.

எல்லாவற்றிற்கும் மேலாக படியைத் தொட்டு வணங்கி வழிபட்டு விட்டு, நந்தியிடம் ஒப்புதல் கேட்டு, விநாயகரை வணங்கி, பிறகு அறுபத்து மூவர் அல்லது நால்வர் வழிபாடு செய்து அனைத்து தெய்வங்களையும் வழிபட வேண்டும்.

நிறைவாக சண்டிகேஸ்வரரிடம் சொல்லிக்கொண்டு வெளியில் வந்து கோபுரத்தைப் பார்த்து விட்டு வீட்டிற்குச் செல்ல வேண்டும். கோபுர தரிசனம் பாவங்களைப் போக்கும்.

Similar News