ஆன்மிகம்

மருதமலையில் பாம்பாட்டி சித்தர் சன்னதி

Published On 2016-09-28 08:44 GMT   |   Update On 2016-09-28 08:44 GMT
முருகப்பெருமான் பாம்பாட்டி சித்தரிடம் மருத மலையில் அருள் விளையாட்டுகள் செய்தார்.
பதினெட்டு சித்தர்களுள் பாம்பாட்டி சித்தரும் ஒருவர்.

இறைவனை இடை விடாது நினைத்து நினைத்து அகக்கண்ணால் கண்டு ஆத்ம சக்தியால் செயற்கரிய செயல்களை செய்து மருத்துவம், ஜோதிடம், இரச வாதம் ஆகியவற்றில் கை தேர்ந்தவர்களை சித்தர்கள் என்பார்கள்.

பாம்பாட்டி சித்தர் பாண்டிய நாட்டில் காடுகளில் காணப்பட்ட பாம்புகளை பிடித்து ஆட்டியும், தன் சொல்படி நடக்க செய்தும் வந்தார். ஒருமுறை நவரத்னம் என்னும் பாம்பை ஆட்ட முயற்சித்த போது சட்டை முனிவரை சந்தித்து யோக நெறியில் சமாதி கூடும் நிலை பெற்றாராம்.

பாம்பாட்டி சித்தர் ஒரு முறை இறந்து போன மன்னன் உடலில் கூடு விட்டு கூடு பாயும் வித்தை மூலம் புகுந்தாராம். இவ்வாறு பல சித்துகளை செய்த இவர் இந்த பாம்பை ஆட்டு வித்ததால் பாம் பாட்டி சித்தர் என்று அழைக்கப்பட்டார். முருகப்பெருமான் பாம்பாட்டி சித்தரிடம் மருதமலையில் அருள் விளையாட்டுகள் செய்தார். ஒரு காலத்தில் உயரமான குன்று உருண்டோடி வர சித்தர் தம் அருட்சக்தியால் பாறையின் முகட்டிலேயே நிற்கும்படி செய்தார் என்பர். 

Similar News