ஆன்மிகம்
புரசைவாக்கம் சீனிவாசபெருமாள் கோவிலில் கருடசேவை
புரசைவாக்கம் சீனிவாசபெருமாள் கோவிலில் கருடசேவையும் நடந்தது.
புரசைவாக்கம் வெள்ளாள தெருவில் உள்ள சீனிவாச பெருமாள் கோவிலில் புரட்டாசி 2-வது சனிக்கிழமையையொட்டி மூலவருக்கு விசேஷ திருமஞ்சனமும், புஷ்ப அங்கி சேவையும் நடந்தது.
ஸ்ரீரங்கத்தில் இருந்து வரவழைக்கப்பட்ட விசேஷ மாலை சாமிக்கு அணிவித்து கருட சேவை விழா நடந்தது. வேத கோஷம் முழங்க, மேளம், பாண்டு வாத்தியம் இசைக்க பஜனையுடன் வீதி உலா நடந்தது. மதியம் சிறப்பு அன்னதானம் நடைபெற்றது.
விழா ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் ந.கங்காதரன் செய்து இருந்தார்.