சினிமா
எதிர்பார்த்த வாய்ப்பு கிடைக்கவில்லை... மனதை மாற்றிக் கொண்ட நடிகை
பிரபலமான நடிகை எதிர்பார்த்த வாய்ப்பு கிடைக்கவில்லை என்பதால் தன்னுடைய மனதை மாற்றிக் கொண்டிருக்கிறார்.
பெரிய முதலாளி வீட்டுக்குச் சென்று மிகவும் பிரபலமான நடிகை, பெரிய திரையில் வாய்ப்புகள் கிடைக்கும் என்று நம்பி இருந்தாராம். இதற்காக நிறைய புகைப்படங்கள் எடுத்து சமூக வலைத்தளங்களில் பரவ விட்டாராம்.
ஆனால் நடிகைக்கு எந்த பட வாய்ப்பும் வரவில்லையாம். இதனால் தனது மனதை மாற்றிக் கொண்ட நடிகை தற்போது சின்னத்திரையில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறாராம். சின்னத்தில் நடிப்பதற்காக பெரும் தொகையை சம்பளமாக கேட்டிருக்கிறாராம். முதலில் தயங்கிய குழுவினர் பிறகு நடிகை கேட்ட தொகையைக் கொடுக்க சம்மதித்திருக்கிறார்களாம்.