சினிமா செய்திகள்

சித்து குமார்

மனிதவள மேம்பாட்டு அதிகாரியை மணக்கும் இசையமைப்பாளர் சித்து குமார்

Published On 2022-08-29 12:37 GMT   |   Update On 2022-08-29 12:37 GMT
  • ‘சிவப்பு மஞ்சள் பச்சை’ படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் சித்து குமார்.
  • இவரின் திருமண தேதி நிச்சயிக்கப்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் மிக வேகமாக வளர்ந்து வரும் இசையமைப்பாளர்களில் ஒருவரான சித்து குமார் 'சிவப்பு மஞ்சள் பச்சை' படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். முதல் படத்திலேயே சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்த சித்து குமார், ஜி.வி.பிரகாஷ் குமார் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற 'பேச்சுலர்' படத்தின் மூலம் இளைஞர்களின் மனம் கவர்ந்த இசையமைப்பாளராக உருவெடுத்து பல முன்னணி நட்சத்திரங்கள் மற்றும் இயக்குனர்களின் படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.

மேலும், "அடி போலி..." என்ற தனியிசை வீடியோ பாடலை இசையமைத்து இயக்கிய இவர் அப்பாடல் மூலம் தமிழ் சினிமாவின் பிஸியான இசையமைப்பாளராகவும் உருவெடுத்துள்ளார். மேலும், இவர் 'கண்ணை நம்பாதே', 'நூறுகோடி வானவில்' போன்ற பல படங்களுக்கு இசையமைத்து வருவதன் மூலம் தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்கள் பட்டியலில் விரைவில் இடம் பிடிப்பார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.


ராஜி - சித்து குமார்

இந்த நிலையில், இசையமைப்பாளர் சித்து குமாருக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டுள்ளது. ஊட்டியை சேர்ந்த எம்.பி.ஏ பட்டதாரி ராஜி என்பவரை சித்து குமார் மணக்கிறார். ராஜி அமெரிக்காவை சேர்ந்த நிறுவனம் ஒன்றில் மனிதவளம் மேம்பாட்டு அதிகாரியாக பணியாற்றுகிறார். பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட சித்து குமார் - ராஜி திருமணம் வரும் செப்டமர் 9 ஆம் தேதி மதுரையில் நடைபெறுகிறது.

Tags:    

Similar News