சினிமா செய்திகள்

பிரக்ருதி மிஸ்ரா

கணவனுடன் தொடர்பு: நடிகரின் மனைவி தாக்கிய நடிகையிடம் போலீஸ் விசாரணை

Published On 2022-07-29 03:22 GMT   |   Update On 2022-07-29 03:22 GMT
  • கடந்த ஆண்டு தேசிய விருது பெற்றவர் நடிகை பிரக்ருதி மிஸ்ரா.
  • தனது கனவ்ருடன் தொடர்பு வைத்து இருப்பதாக கூறி பிரக்ருதி மிஸ்ராவை நடு ரோட்டில் ஓட ஓட விரட்டி அடித்த நடிகரின் மனைவி.

பிரபல ஒடியா நடிகர் பாபுசன் மொகந்தி. இவர் சில தினங்களுக்கு முன்பு ஒடியா இளம் நடிகை பிரக்ருதி மிஸ்ராவுடன் காரில் அமர்ந்து இருந்தார். அப்போது அங்கு வந்த பாபுசன் மொகந்தியின் மனைவி திருப்தி சதபதி காருக்குள் தனது கணவருடன் பிரக்ருதி மிஸ்ரா ஒன்றாக இருப்பதை பார்த்து இருவருக்கும் தகாத உறவு இருப்பதாக ஆத்திரம் அடைந்தார்.


பிரக்ருதியை வெளியே இழுத்து சரமாரியாக அடித்தார். அவரிடம் இருந்து தப்பி ஓடிய பிரக்ருதியை பின்னால் விரட்டி சென்று 'என் குடும்பத்தை நாசம் செய்து விட்டியே' என்று கத்தியபடி தாக்கினார். இந்த வீடியோ வலைத்தளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.


இதையடுத்து பிரக்ருதி மிஸ்ரா தரப்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. பதிலுக்கு திருப்தியும் பிரக்ருதி மீது புகார் அளித்தார். போலீசார் வழக்குபதிவு செய்து பிரக்ருதியிடம் அவரது வீட்டுக்கு சென்று விசாரணை நடத்தினர். பிரக்ருதி பெற்றோர் முன்னிலையில் ஒருமணி நேரம் இந்த விசாரணை நடந்தது. நடிகர் பாபுசனுடன் உள்ள உறவு குறித்து பல்வேறு கேள்விகள் எழுப்பி போலீசார் விசாரித்தனர். திருப்தி சதபதி அளித்த புகாரின்பேரில் இந்த விசாரணை நடந்ததாக கூறப்படுகிறது. இதன் விசாரணை விவரங்களை போலீசார் வெளியிடவில்லை. இந்த விவகாரம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News