சினிமா
வடிவேலு

நம்பாதீங்க... எல்லாம் போலி... வடிவேலு அதிரடி

Published On 2021-09-13 07:16 GMT   |   Update On 2021-09-13 07:16 GMT
தமிழ் சினிமாவில் ரீ- என்ட்ரி கொடுக்க தயாராகி வரும் நடிகர் வடிவேலு, தன்னைப் பற்றி சமூக வலைத்தளத்தில் வரும் புகைப்படங்கள் பற்றி கூறியிருக்கிறார்.
தமிழ் பட உலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக கலக்கிய வடிவேலுவுக்கு வயதானவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைத்து வயதிலும் ரசிகர்கள் உள்ளனர். இம்சை அரசன் 24-ம் புலிகேசி படத்தில் நடிக்க அவர் மறுத்ததால் இயக்குனர் ஷங்கர் அளித்த புகாரின் பேரில் வடிவேலுவை புதிய படங்களுக்கு ஒப்பந்தம் செய்ய தயாரிப்பாளர் சங்கம் தடை விதித்தது. இதனால் கடந்த சில வருடங்களாக படங்களில் வடிவேலு நடிக்கவில்லை.

சமீபத்தில் அவர் மீதான தடை நீக்கப்பட்டது. இதையடுத்து மீண்டும் படங்களில் நடிக்க தயாராகி வருகிறார் வடிவேலு. அதன்படி சுராஜ் இயக்கும் படத்தில் முதலில் நடிக்க உள்ளார் வடிவேலு, இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்திற்கான ஆரம்பக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.



இந்நிலையில், பேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட எந்த ஒரு சமூக வலைத்தளங்களிலும் எனக்கு கணக்கு கிடையாது, எனது பெயரில் வெளியாகும் பதிவுகள் போலியானவை என்று நடிகர் வடிவேலு கூறியிருக்கிறார்.
Tags:    

Similar News