சினிமா
கீர்த்தி சுரேஷ்

தொழிலதிபராக மாறிய கீர்த்தி சுரேஷ்

Published On 2021-08-22 06:59 GMT   |   Update On 2021-08-22 06:59 GMT
தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம்வரும் கீர்த்தி சுரேஷ், புதிய தொழில் ஒன்றை தொடங்கி உள்ளார்.
ஆரம்பத்தில் கமர்ஷியல் படங்களில் கவனம் செலுத்தி வந்த கீர்த்தி சுரேஷ் ‘நடிகையர் திலகம்’ படத்தில் மறைந்த நடிகை சாவித்திரி கதாபாத்திரத்தில் நடித்து தேசிய விருது பெற்ற பிறகு அனைத்து மொழி திரையுலகினராலும் கவனிக்கப்பட்டு முன்னணி நடிகையாக உயர்ந்தார். 

தற்போது தமிழில் அண்ணாத்த, சாணிக் காயிதம் போன்ற படங்களையும், தெலுங்கில் சர்காரு வாரி பட்டா மற்றும் மலையாளத்தில் அரபிக்கடலண்டே சிம்கம் போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார். 



இவ்வாறு பல்வேறு மொழி படங்களில் பிசியாக நடித்து வரும் கீர்த்தி சுரேஷ், தற்போது தொழிலதிபராக மாறி உள்ளார். சருமத்தை பாதுகாக்க உதவும் அழகு சாதன பொருட்கள் தயாரிக்கும் நிறுவனத்தை துவங்கியுள்ளார் கீர்த்தி சுரேஷ். 

இந்த அழகு சாதன பொருட்கள் அனைத்து இயற்கையான முறையில் தயார் செய்யப்படுகின்றனவாம். இதை விளம்பரப்படுத்தவும், ஆன்லைனில் விற்பனை செய்யவும் தனியாக இணையதளம் ஒன்றையும் அவர் துவங்கியுள்ளார்.
Tags:    

Similar News