சினிமா

நயன்தாரா இடத்தை குறிவைக்கும் கீர்த்தி சுரேஷ்

Published On 2018-12-30 10:10 GMT   |   Update On 2018-12-30 10:10 GMT
2018ம் ஆண்டு அதிக படங்களில் நடித்துள்ள கீர்த்தி சுரேஷ், அடுத்த ஆண்டு நயன்தாரா இடத்தை குறி வைத்திருக்கிறார். #KeerthySuresh #Nayanthara
2018 -ம் ஆண்டில் தமிழ் சினிமாவில் அதிக படங்களில் நடித்தவர்கள் என்ற பெருமையை 3 கதாநாயகிகள் பெற்றுள்ளனர்.

கீர்த்தி சுரேஷ் ‘தானா சேர்ந்த கூட்டம், நடிகையர் திலகம், சர்கார், சாமி ஸ்கொயர், சண்டக்கோழி 2’ ஆகிய படங்களில் கதாநாயகியாகவும் சீமராஜா படத்தில் கவுரவ வேடத்திலும் நடித்தார். ஐஸ்வர்யா ராஜேஷ் லட்சுமி, வட சென்னை, செக்க சிவந்த வானம், கனா ஆகிய படங்களில் கதாநாயகியாகவும் சாமி ஸ்கொயர் படத்தில் கவுரவ வேடத்திலும் நடித்தார்.

வரலட்சுமி மிஸ்டர் சந்திரமவுலி, சர்கார், சண்டக்கோழி 2, எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம், மாரி 2 ஆகிய படங்களில் வில்லி, குணச்சித்திர வேடங்களில் நடித்தார். இந்த மூவரும் இந்த ஆண்டில் அதிக படங்கள் நடித்த உற்சாகத்தில் இருக்கிறார்கள். ஆனால் வரலட்சுமிக்கு மட்டுமே வரிசையாக படங்கள் உள்ளன.

இவர்களுக்கு அடுத்து சமந்தா, சாயிஷா, ஜோதிகா ஆகியோர் தலா 3 படங்களிலும் மற்ற நடிகைகள் குறைந்தது 2 படங்களிலும் நடித்துள்ளனர்.



இந்த ஆண்டு அதிக படங்களில் கதாநாயகியாக நடித்ததோடு மட்டுமல்லாமல் அதிக வெற்றி படங்களை கொடுத்ததும் கீர்த்தி சுரேஷ் தான். கடந்த சில ஆண்டுகளாக இந்த பெருமைகளை கைவசம் வைத்து இருந்த நயன்தாரா இந்த ஆண்டு 2 படங்களில் தான் நடித்துள்ளார். இரண்டுமே அவர் முதன்மை வேடத்தில் நடித்தவை.

இது தொடர்ந்தால் தன்னுடைய முதல் இடத்துக்கு ஆபத்து என்பதை உணர்ந்த நயன்தாரா சமீபகாலமாக பெரிய கதாநாயகர் படங்களிலும் நடிக்க தொடங்கி உள்ளார். நயன்தாரா இடத்தை இந்த ஆண்டும் கீர்த்தி சுரேஷ் பிடிப்பாரா என்பதை அவர் தேர்வு செய்யும் படங்களே முடிவு செய்யும். #KeerthySuresh #Nayanthara
Tags:    

Similar News