சினிமா

திருமண வாழ்க்கையை விரும்புகிறேன் - சாய் பல்லவி

Published On 2018-12-29 11:19 GMT   |   Update On 2018-12-29 11:19 GMT
லிவிங் டூகெதர் உறவு எனக்கு தேவையில்லை, நான் திருமணம் செய்துகொண்டு வாழ்வதையே விரும்புகிறேன் என்று நடிகை சாய் பல்லவி தெரிவித்துள்ளார். #SaiPallavi
சூர்யாவுடன் என்.ஜி.கே படத்தில் நடித்து வரும் சாய் பல்லவி, அடுத்து பகத் பாசிலுடன் ஒரு மலையாள படத்தில் நடிக்க இருக்கிறார். காதல், திருமணம், லிவிங் டூகெதர் குறித்து ஒரு பேட்டியில் மனம் திறந்து பேசியுள்ளார்.

‘நான் காதலித்திருக்கிறேனா, இல்லையா? லிவிங் டூ கெதர் உறவில் வாழ்வீர்களா என்று கேட்கிறார்கள். எனது கல்லூரி நாட்களில் நான் புத்தகங்களை காதலித்தேன். தற்போது சினிமாவை காதலித்துக் கொண்டிருக்கிறேன்.



என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையை பொறுத்தவரை லிவிங் டூகெதர் உறவு எனக்கு தேவையில்லை. இப்படி சொல்வதால் அதற்கு எதிராக இருக்கிறேன் என்பதல்ல.

இது எல்லாமே அவரவர்களின் செயல்பாடுகளை பொறுத்தது. என்னைப் பொறுத்தவரை எனக்கு அத்தகைய உறவு தேவையில்லை. நான் திருமணம் செய்துகொண்டு வாழ்வதையே விரும்புகிறேன்’. இவ்வாறு அவர் கூறியுள்ளார். #SaiPallavi

Tags:    

Similar News