சினிமா

ரகுல் ப்ரீத் சிங்கின் இன்ஸ்டாகிராமை முடக்கிய மர்ம நபர்

Published On 2018-10-25 12:19 GMT   |   Update On 2018-10-25 12:19 GMT
திரிஷாவின் ட்விட்டர் கணக்கை தொடர்ந்து நடிகை ரகுல் ப்ரீத் சிங்கின் இன்ஸ்டாகிராம் கணக்கை மர்ம நபர்கள் முடக்கியுள்ளனர். #RakulPreetSingh
சூர்யா நடிக்கும் என்ஜிகே மற்றும் கார்த்தி நடிக்கும் தேவ் படங்களில் நடித்து வருகிறார் ரகுல் ப்ரீத் சிங். சிவகார்த்திகேயன் நடிக்கும் பெயரிடப்படாத படத்திலும் நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு, இந்தி என வலம் வரும் அவர் இந்தியில் தற்போது அஜய் தேவ்கன் நடிக்கும் தே தே பியார் தே படத்திலும் தபுவுடன் இணைந்து நடிக்க உள்ளார்.

டுவிட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலை தளங்களில் பிசியாக இயங்கி வரும் அவர் தனது இன்ஸ்டாகிராம் கணக்கு குறித்து டுவிட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார்.

அந்த பதிவில், “ எனது இன்ஸ்டாகிராம் கணக்கு ஹேக் செய்யப்பட்டுவிட்டது. எனவே எனது கணக்கிலிருந்து வரும் எந்த லிங்கிற்கும், மெசேஜிற்கும் கணக்கு மீட்டெடுக்கப்படும் வரை பதிலளிக்க வேண்டாம். நன்றி” என குறிப்பிட்டுள்ளார்.



பிரபலங்களின் சமூக வலைதள கணக்குகள் இதுபோல ஹேக் செய்யப்படும் சம்பவம் அடிக்கடி நடந்து வருகிறது. ஹேக்கர்கள் அந்தக் கணக்குகளிலிருந்து தேவையற்ற பதிவுகள், மெசேஜ்களையும் பதிவிடும் போது அது பெரிய பிரச்சினையாக மாறிவிடுகிறது.

சில தினங்களுக்கு முன்பு நடிகை திரிஷா வின் டுவிட்டர் கணக்கும் இதே போல ஹேக் செய்யப்பட்டது.
Tags:    

Similar News