சினிமா

ராதிகா ஆப்தேவின் எதிர்ப்பார்ப்பு நிறைவேறுமா?

Published On 2018-10-09 11:14 GMT   |   Update On 2018-10-09 11:14 GMT
பிரபல பாலிவுட் நடிகையும், தமிழில் கபாலி மூலம் மிகவும் பிரபலமான ராதிகா ஆப்தேவின் நல்ல கதைக்காக எதிர்ப்பார்த்து காத்திருக்கிறார். #RadhikaApte
கபாலி திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றவர் ராதிகா ஆப்தே. நடிப்பிற்காகப் பேசப்படுவதை போல இவர் தனது துணிச்சலான கருத்துக்கள் மூலமும் சமூக வலைதளங்கள் தொடங்கி ஊடகங்களிலும் விவாதப்பொருளாகி வருகிறார்.

ராதிகா ஆப்தே நடிப்பில் வெளியாகியுள்ள ‘அந்தாதுண்’ திரைப்படம் பாலிவுட்டில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இருப்பினும் இன்னும் சவாலான திரைப்படத்தில் நடிப்பதற்காகக் காத்திருப்பதாக அவர் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், “நல்ல கதைகளுக்காக காத்திருக்கிறேன். நல்ல கதாபாத்திரங்களுக்கு இங்குப் பற்றாக்குறை நிலவுகிறது. இருப்பினும் ஒரு நல்ல மற்றும் நேர்மறையான கதை வருமா என்றுதான் எதிர்பார்த்திருக்கிறேன்.



நான் பல்வேறு நல்ல கதாபாத்திரங்களில் நடித்திருந்தாலும், இப்போது நல்ல கதை இல்லாமல் காத்துக் கொண்டிருக்கிறேன். என்ன கதை கிடைக்கிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்” என்று கூறியுள்ளார். மகாராஷ்டிராவைச் சேர்ந்தவரான ராதிகா ஆப்தே 2003ஆம் ஆண்டு முதல் திரைப்படங்களில் நடித்து வருகிறார். கபாலி, தோனி, ஆல் இன் ஆல் அழகுராஜா உள்ளிட்ட 10 தமிழ்ப் படங்களிலும் இவர் நடித்துள்ளார்.
Tags:    

Similar News