சினிமா

மிஷ்கின் என்னை நம்ப வைத்து ஏமாற்றி விட்டார் - புதுமுக நடிகர் மைத்ரேயா குமுறல்

Published On 2018-10-01 18:16 GMT   |   Update On 2018-10-01 18:16 GMT
சைக்கோ கதை எனக்காக உருவாக்கப்பட்டது என்றும் இயக்குனர் மிஷ்கின் என்னை நம்ப வைத்து ஏமாற்றி விட்டார் என்றும் புதுமுக நடிகர் மைத்ரேயா புகார் கூறியுள்ளார்.
பிரபல இயக்குனர் மிஷ்கின், தற்போது ‘சைக்கோ’ என்ற படத்தை இயக்கவுள்ளார். இப்படத்திற்கான முன்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் ‘சைக்கோ’ படத்தின் டைட்டில் லுக் போஸ்டரும் வெளியானது.

இந்நிலையில், புதுமுக நடிகர் மைத்ரேயா, ‘சைக்கோ’ திரைப்படம் எனக்காக உருவாக்கப்பட்ட கதை என்றும், இயக்குனர் மிஷ்கின் என்னிடம் பணம் பெற்றுக் கொண்டு ஏமாற்றி விட்டதாகவும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். 


Tags:    

Similar News