சினிமா

பேய் படங்களை தவிர்க்கிறார் அனுஷ்கா

Published On 2018-09-24 08:38 GMT   |   Update On 2018-09-24 08:38 GMT
`பாகுபலி' படத்திற்கு பிறகு இந்திய சினிமாவில் முக்கி நாயகியாக பார்க்கப்படும் ஹன்சிகா தற்போது கதை கேட்டு வரும் நிலையில், இனி கொஞ்ச காலத்துக்கு பேய் படங்களில் நடிக்க வேண்டாம் என்று முடிவு செய்திருக்கிறார். #AnushkaShetty
`பாகுபலி' படத்துக்கு பிறகு அனுஷ்கா நடிப்பில் வெளியான பாகமதி படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அந்த படத்திற்கு பிறகு படங்களில் ஒப்பந்தமாகாமல் தவிர்த்து வருகிறார் அனுஷ்கா. 

திருமணத்திற்காக சில பரிகாரங்கள் செய்யவிருப்பதால் அனுஷ்கா கதை தேர்வில் ஈடுபடவில்லை என்று கூறப்பட்டது. இந்த நிலையில், அனுஷ்கா தற்போது கதை தேர்வில் மிக கவனமாக ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.

ஆனால், அனுஷ்காவுக்கோ மீண்டும் மீண்டும் பேய் பட கதைகளாகவே வருகின்றனவாம். எனவே சில காலத்துக்கு பேய் படங்களில் நடிப்பதில்லை என்று முடிவு எடுத்திருக்கிறார். 



அதோடு கதை கேட்கும்போதே அந்த கதை இந்தி சினிமாவுக்கும் ஒத்து போவது போல கதை கேட்கிறாராம். பாகுபலியால் கிடைத்த இந்திய அளவிலான வரவேற்பை அனுஷ்கா தான் சிறப்பாக அறுவடை செய்யப்போகிறார் என்கிறார்கள். #AnushkaShetty

Tags:    

Similar News