சினிமா
சிவகார்த்திகேயனின் அடுத்த படம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
ரவிக்குமார் மற்றும் ராஜேஷ்.எம் படங்களை முடித்த பிறகு சிவகார்த்திகேயன் அடுத்ததாக நடிக்கவிருக்கும் புதிய படத்தை பி.எஸ்.மித்ரன் இயக்கவிருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. #Sivakarthikeyan #PSMithran
`சீமராஜா' படத்தை தொடர்ந்து, சிவகார்த்திகேயன் தற்போது ரவிக்குமார் மற்றும் ராஜேஷ்.எம் இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்த இரு படங்களை முடித்த பிறகு சிவகார்த்திகேயன் அடுத்ததாக `இரும்புத்திரை' பட இயக்குநர் பி.எஸ்.மித்ரனுடன் இணையவிருப்பதாகவும், அந்த படத்தை 24 ஏ.எம்.ஸ்டூடியோஸ் தயாரிக்க இருப்பதாகவும் முன்னதாக கூறியிருந்தோம்.
இந்த தகவலை 24 ஏ.எம்.ஸ்டூடியோஸ் நிறுவன உரிமையாளர் ஆர்.டி.ராஜா தற்போது உறுதிப்படுத்தி உள்ளார். இதுகுறித்து ராஜா அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது,
`24 ஏ.எம்.ஸ்டூடியோஸின் புரொடக்ஷன்ஸ் எண் 7-வது படத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் பி.எஸ்.மித்ரனுடன் இணைவதில் மகிழ்ச்சி. மற்ற தகவல்கள் விரைவில் வெளியாகும்' என்று குறிப்பிட்டுள்ளார். பி.எஸ்.மித்ரனும் அதை உறுதிப்படுத்தியுள்ளார்.
It’s official : In the journey of Making good content and wholesome entertainment, Today with all your blessings and support, We are so happy to announce our Production No:7 with our @Siva_Kartikeyan and @Psmithran 😊👍🏻
— RD RAJA (@RDRajaofficial) September 24, 2018
Other cast & crew will be announced soon..
With all your Blessings & Support, After the successful journey of #Irumbuthirai & #Abhimanyudu,
Officially beginning my next big with @Siva_Kartikeyan & @24AMSTUDIOS. 😇😇
— PS Mithran (@Psmithran) September 24, 2018
`இரும்புத்திரை' படத்தில் சமூக கருத்தை முன்வைத்த மித்ரன், சமூகத்திற்கு தேவையான அரசியல் த்ரில்லர் கதையை உருவாக்கி வருவதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டில் துவங்க இருக்கிறது. #SK15 #Sivakarthikeyan #PSMithran