சினிமா

பரிசளித்து படக்குழுவினரை மகிழ்ச்சியில் ஆழ்த்திய கீர்த்தி சுரேஷ்

Published On 2018-08-10 14:16 GMT   |   Update On 2018-08-10 14:16 GMT
கீர்த்தி சுரேஷ் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படத்தின் படக்குழுவினருக்கு பரிசளித்து அவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். #KeerthySuresh
நடிகையர் திலகம் படத்தின் வெற்றியை தொடர்ந்து கீர்த்தி சுரேஷ் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘சண்டக்கோழி 2’. இதில் விஷால் நாயகனாக நடித்துள்ளார். லிங்குசாமி இப்படத்தை இயக்கியுள்ளார். விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்தது. கீர்த்தி சுரேஷ் சம்மந்தப்பட்ட காட்சிகள் நேற்றோடு நிறைவு பெற்றது.

எப்போதும் படப்பிடிப்பு நிறைவடைந்தால் எல்லோரும் கேக் வெட்டி, செல்பி மற்றும் புகைப்படங்கள் எடுத்து கொண்டாடுவது வழக்கம். ஆனால் கீர்த்தி சுரேஷ் செய்த செயல் படக்குழுவினர் 150 பேரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. நாயகி கீர்த்தி சுரேஷ் படப்பிடிப்பு தளத்தில் எல்லோருக்கும் 1 கிராம் கோல்ட் காயின் வழங்கியுள்ளார். தன்னுடைய படக்குழுவை மிகவும் நேசித்து கீர்த்தி வழங்கிய பரிசு படக்குழுவினர் அனைவரையும் மிகவும் கவர்ந்துள்ளது. 



விஷாலின் விஷால் பிலிம் பேக்டரி மற்றும் பென் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்தை, லைகா புரொடக்‌ஷன்ஸ் வெளியிடுகிறது. அக்டோபர் மாதம் 18-ம் தேதி ஆயுத பூஜை வெளியீடாக இந்தப் படம் ரிலீஸாகிறது.
Tags:    

Similar News