சினிமா
இரண்டையுமே ரசிகர்கள் ஏற்றுக் கொள்வார்கள் - சமந்தா
இந்த ஆண்டு முதல் பாதியில் சமந்தா நடிப்பில் வெளியான மூன்று படங்களும் வெற்றி பெற்றுள்ள நிலையில், அடுத்த பாதியில் இரு படங்கள் ஒரே நாளில் வெளியாவதை ரசிகர்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்று சமந்தா கூறியுள்ளார். #Samantha
சமந்தாவுக்கு ஒரே வாரத்தில் 2 படங்கள் என்பது ராசி போல. அவர் நடித்த இரும்புத்திரை படமும், நடிகையர் திலகம் படமும் ஒரே நாளில் வெளியாகின. அதேநேரத்தில் இரண்டு படங்களுக்கும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வெற்றியும் பெற்றன.
இந்த நிலையில், சமந்தா நடிப்பில் செப்டம்பர் 13-ஆம் தேதி சீமராஜா, யு டர்ன் ஆகிய 2 படங்களும் வெளியாக இருக்கின்றன. சீமராஜா படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சிலம்ப டீச்சராக சமந்தா நடித்து இருக்கிறார்.
யு டர்ன் படத்தில் முதன்மை கதாபாத்திரம். பத்திரிகை நிரூபராக நடித்திருக்கிறார். இதுபற்றி சமந்தாவிடம் கேட்டதற்கு ‘2 படங்களுமே வேறு வேறு வகையை சேர்ந்தவை. சீமராஜா கிராமத்து படமாகவும், யு டர்ன் ஒரு கொலை சம்பவத்தின் பின்னணியிலும் உருவாகி இருக்கின்றன. இரண்டையுமே ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்கள்’ என்று கூறி உள்ளார். #Samantha #Seemaraja #UTurn