சினிமா

அப்படி ஒருத்தர் கிடைத்தால் தான் திருமணம் - பிரியா ஆனந்த்

Published On 2018-07-31 10:32 GMT   |   Update On 2018-07-31 10:32 GMT
சரியான ஒரு நபர் கிடைத்தால் தாராளமாக கல்யாணம் பண்ணிக்கலாம், இல்லையெனில் தனியாக இருப்பதே நல்லது என்று பிரியா ஆனந்த் கூறி இருக்கிறார். #PriyaAnand
‘வாமனன்’ படம் மூலமாக அறிமுகமானவர் பிரியா ஆனந்த். சில தமிழ் படங்களில் தலைகாட்டியிருந்தாலும் மலையாளம் மற்றும் கன்னடப் படங்களில் நடிப்பதற்கு ஆர்வம் காட்டி வந்தார்.

தற்போது, மலையாள சினிமாவையே அதிக எதிர்பார்ப்போடு பார்த்துக் கொண்டிருக்கும் ‘காயம்குளம் கொச்சுண்ணி’ மற்றும் தமிழில் ‘எல்.கே.ஜி’ ஆகிய படங்களில் நடித்துவரும் பிரியா ஆனந்த் ஒரு பேட்டியில் “கல்யாணம் பண்ணிக்கணும்ங்கிற கட்டாயத்தின் பேரில் கல்யாணம் பண்ணிக்கத் தேவையில்லை. பாட்டி காலத்துல தான் ஒரு பொண்ணுனா கட்டாயம் கல்யாணம் பண்ணிக்கணும்னு சொல்வாங்க. ஆனா, இப்போ கல்யாணம் பண்ணாமலும் சில பெண்கள் இருக்காங்க.



நான் என்ன படிக்கணும், எந்த வேலைக்குப் போகணும், எப்படி இருக்கணும்னு முடிவு பண்ற பெண்களுக்கு யாரைக் கல்யாணம் பண்ணிக்கணும்ங்கிற பக்குவமும் இருக்கு. சரியான ஒரு நபர் கிடைச்சா, தாராளமா கல்யாணம் பண்ணிக்கலாம். இல்லைனா தனியாக இருப்பதே நல்லது” என்று கூறி இருக்கிறார். #PriyaAnand

Tags:    

Similar News