சினிமா

சூர்யாவின் என்ஜிகே குறித்து பரவிய வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த செல்வராகவன்

Published On 2018-07-26 07:40 GMT   |   Update On 2018-07-26 07:40 GMT
செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் ‘என்ஜிகே’ படம் குறித்து வதந்தி பரவிய நிலையில், அதுகுறித்து படத்தின் இயக்குநர் செல்வராகவன் ட்விட்டரில் விளக்கம் அளித்துள்ளார். #NGK #Suriya
சூர்யா தற்போது செல்வராகவன் இயக்கத்தில் ‘என்ஜிகே’ படத்தல் நடித்து வருகிறார். இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடந்து வந்த நிலையில், இயக்குநர் செல்வராகவனுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளதால், படப்பிடிப்பை தொடர முடியவில்லை என்றும், எனவே படம் தீபாவளிக்கு ரிலீசாகாது, கிறிஸ்துமசுக்கு தள்ளிப்போனதாக சமூக வலைதளங்களில் சில தகவல்கள் பரவின. 

இதற்கு பதிலளிக்கும் விதமாக ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள செல்வராகவன்,

`நண்பர்களே, இது ஒரு எளிமையான மருத்துவ சிகிச்சை தான். நான் நலமுடன் இருக்கிறேன். இன்னும் ஒரு சில நாட்களில் என்ஜிகே படப்பிடிப்பு துவங்கும். உங்களது அன்பிற்கு நன்றி' என்று கூறியிருக்கிறார். 

இதன்மூலம் படம் வருகிற தீபாவளிக்கு ரிலீஸாவது உறுதியாகி இருக்கிறது. விஜய்யின் சர்கார் படமும் தீபாவளிக்கு ரிலீசாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இந்த படத்தில் சூர்யா ஜோடியாக சாய் பல்லவி, ரகுல் ப்ரீத்தி சிங் நடிக்கின்றனர். ஜெகபதிபாபு வில்லனாக நடிக்க, ராம்குமார் கணேசன், இளவரசு, பாலா சிங் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். டிரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்து வருகிறது. #NGK #Suriya

Tags:    

Similar News