சினிமா
முதல் படத்தில் கேவலமாக இருந்தேன் - ஐஸ்வர்யா ராஜேஷ்
தற்போது பல படங்களில் பிசியாக நடித்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷ், தன்னுடைய முதல் படத்தில் கேவலமாக இருந்ததாக கூறியிருக்கிறார். #AishwaryaRajesh
இயல்பாக நடிப்பது மட்டும் அல்லாமல் இயல்பாகவே பேசுபவர் நடிகை ஐஸ்வர்யா. ஒரு பேட்டியில் ’என் முதல் படத்தில் என்னை பார்க்கும்போது ரொம்ப கேவலமாக இருந்தேன். போகப் போகத்தான் சினிமாவில் என்னை நானே வளர்த்துக்கொள்வது எப்படி என்று தெரிந்துகொண்டேன்.
ஆனால் இப்போது வருகிற கதாநாயகிகள் வரும்போதே உடை அலங்காரம், திறமை, அறிவு என்று சூப்பராக வருகிறார்கள். கடின உழைப்பு இருக்கவேண்டும். கற்றுக்கொள்ளும் ஆர்வம் அதிகமாக இருக்கவேண்டும். இதெல்லாம் இருந்தாலே போதும். யார் வேண்டுமானாலும் நல்ல நிலைமைக்கு வரலாம்’ என்று கூறி இருக்கிறார்.
ஐஸ்வர்யா நடிப்பில் தற்போது ‘துருவ நட்சத்திரம்’, ‘சாமி ஸ்கொயர்’, ‘வடசென்னை’, ‘செக்கச் சிவந்த வானம்’ உள்ளிட்ட பல படங்கள் உருவாகி வருகிறது. விரைவில் இப்படங்கள் அடுத்தடுத்து வெளியாக இருக்கிறது.