சினிமா
ரசிகர்களை ஆச்சர்யப்பட வைத்த பிரியங்கா சோப்ரா
பாலிவுட்டில் முன்னணி நடிகையாகவும், ஹாலிவுட்டிலும் பிரபலமாக இருக்கும் பிரியங்கா சோப்ரா, அவரது ரசிகர்களுக்கு ஆச்சர்யத்தை அளித்துள்ளார். #PriyankaChopra
ஆயிஷா சவுத்திரி என்னும் 13 வயது சிறுமி நுரையீரல் தொடர்பான பல்மனரி ஃபைப்ரோசிஸ் என்னும் நோயால் பாதிக்கப்பட்டவர். ஆனால் தனது சுயமுன்னேற்ற உரைகளால் நாடு முழுவதும் பிரபலம் ஆனார்.
துரதிருஷ்டவசமாக தனது 18 வது வயதில் மறைந்த ஆயிஷாவின் வாழ்க்கை இந்தியில் படமாக உள்ளது. இதில் ஆயிஷாவின் அம்மாவாக பிரியங்கா சோப்ரா நடிக்க உள்ளார். படத்துக்கு த ஸ்கை ஈஸ் பின்க் என்று பெயரிடப்பட்டுள்ளது. ஆயிஷாவாக சைரா வாசிம் நடிக்க உள்ளார்.
பாலிவுட்டில் முன்னணி நடிகையாகவும், ஹாலிவுட்டிலும் பிரபலமாக இருக்கும் பிரியங்கா சோப்ரா அம்மா வேடத்தில் நடிக்க இருப்பது அவரது ரசிகர்களுக்கு ஆச்சர்யத்தை அளித்துள்ளது.