சினிமா

சயின்டிபிக் திரில்லராக உருவாகும் நகல்

Published On 2018-07-02 15:59 GMT   |   Update On 2018-07-02 16:01 GMT
ஏ.ஆர்.கிருஷ்ணா மோகன் இயக்கத்தில் சிவசக்தி, ரிஷ்மா நடிப்பில் சயின்டிபிக் திரில்லராக உருவாக இருக்கிறது நகல் திரைப்படம். #Nagal
எஸ் 2 எஸ் பிக்சர்ஸ் புரொடக்சன் தயாரிப்பில், ஏ.ஆர்.கிருஷ்ணா மோகன் இயக்கத்தில், சிவசக்தி நடிப்பில் உருவாகவுள்ள திரைப்படம் ‘நகல்’. இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று துவங்கியது.

இன்றைய உலகத்தில் திரைப்பட இயக்குனர்கள் பல்வேறு புதுமையான கோணத்தில் திரைப்படங்களை உருவாக்கி வருகிறார்கள். அப்படி புதுமையான கதையம்சங்களுடன் வரும் படங்கள் பல உள்ளன. அதில் மிகவும் விறுவிறுப்பான Sci-fi படமாக உருவாகவுள்ளது இந்த "நகல்". இதில் நாயகன் சிவசக்திக்கு ஜோடியாக மும்பை மாடல் ரிஷ்மா நாயகியாக நடிக்கவுள்ளார். சதுர்த்தி ஐயப்பன் திரைக்கதை எழுதியுள்ளார்.

இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க தமிழில் முன்னணி நடிகர்கள் பலரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. படத்தின் 75% படப்பிடிப்பு சென்னையிலும், மீதம் உள்ள படப்பிடிப்பு வெளிநாடுகளிலும் உருவாகவுள்ளது. மெடிக்கல் ரீதியான காட்சிகளை வெளிநாடுகளில் படமாக்கவுள்ளனர் குழுவினர். பாடல்கள் ஊட்டியில் உருவாகவுள்ளது.



இயக்குனர் சுப்பிரமணிய சிவா மற்றும் நடிகர் / ஒளிப்பதிவாளர் நட்டி நட்ராஜ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர்.
Tags:    

Similar News