சினிமா
எங்க கிட்ட வச்சிக்காத - தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டிற்கு சிம்பு ஆவேசம்
தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கிச்சூட்டிற்கு நடிகர் சிம்பு எங்க கிட்ட மோதாதே என்று ஆவேசமாக பேசி வீடியோ வடிவில் கண்டனம் தெரிவித்துள்ளார். #STR #Sterlite
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் பொதுமக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இந்த துப்பாக்கிச்சூட்டில் இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவத்துக்கு பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்களும், அமைப்புகளும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும் ரஜினி, கமல் மற்றும் சினிமா பிரபலங்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். தற்போது நடிகர் சிம்புவும் வீடியோ வடிவில் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அதில், ‘தூத்துக்குடியில் போராட்டத்தில் ஈடுபட்ட அப்பாவியான பொதுமக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியிருக்கிறார்கள். என்ன நடக்கிறது இந்த மாநிலத்தில். தலைவர்களும், பிரபங்களும் இரங்கல் மட்டும் தெரிவித்து வருகிறார்கள். அதனால், ஒரு புரோஜனமும் இல்லை. இதனால், இறந்தவர்கள் திரும்பி வரவா போகிறார்கள். இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது. மனசு வலிக்கிறது. மொழி தான் பிரச்சனையா.. நான் ஆங்கிலத்தில் பேசுகிறேன். பிரச்சனைக்கு தீர்வு என்னிடம் உள்ளது. என் கிட்ட.. தமிழர்கள் கிட்ட மோதாதே’ என அவேசமாக பேசியுள்ளார்.