சினிமா

நடுரோட்டில் நடிகையின் ஆடையை பிடித்து இழுத்த இளைஞர்கள்

Published On 2018-04-24 15:33 GMT   |   Update On 2018-04-24 15:33 GMT
பாலிவுட்டில் மாடலிங் மற்றும் நடிகையாக இருக்கும் ஆகார்ஷி சர்மாவிற்கு நடுரோட்டில் இளைஞர்கள் இரண்டு பேர் பாலியல் தொல்லை கொடுத்திருக்கிறார்கள். #AakarshiSharma
சமீபகாலமாக பெண்களுக்கு பாலியல் தொல்லைகள் அதிகரித்து வருகிறது. இதனை எதிர்த்து பலரும் குரல் கொடுத்து வருகின்றனர். குறிப்பாக திரைத்துறையில் இருக்கும் பெண்களுக்கு பாலியல் தொல்லைகள் அதிகமாக இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்நிலையில், பாலிவுட் நடிகையும் மாடலுமான ஆகார்ஷி சர்மா இரு சக்கர வாகனத்தில் சென்றிருக்கிறார். அப்போது இளைஞர்கள் இரண்டு பேர் நடிகையின் பின்னாடியே துரத்தி வந்திருக்கிறார்கள். திடீரென ஆகார்ஷி சர்மாவின் பாவாடையை பிடித்து இழுத்து ஆபாச வார்த்தைகளால் பேசியிருக்கிறார்கள்.

இதனால் அதிர்ச்சியடைந்த ஆகார்ஷி சர்மா, வண்டியை நிறுத்த முடியாமல் நிலை தடுமாறி கீழே விழுந்து காயமடைந்தார். இதுகுறித்து நடிகை கூறும்போது, நடுரோட்டில் நடந்த இந்த சம்பவத்தை யாரும் தட்டி கேட்கவில்லை. யாரும் உதவிக்கும் வரவில்லை. இது எனக்கு மன வருத்தத்தை ஏற்படுத்தி இருக்கிறது.



மர்ம நபர்களை பிடிக்க புகார் செய்ய இருக்கிறேன். ஆனால் அவர்கள் பிடிபடுவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை. நான் வந்த பாதையில் எந்த சிசிடிவி கேமராக்களும் இல்லை’ என்று கூறி அடிப்பட்ட புகைப்படத்தை வெளியிட்டிருக்கிறார் ஆகார்ஷி சர்மா.
Tags:    

Similar News