சினிமா

மூன்று பிரிவுகளில் தேசிய விருதை வென்ற பாகுபலி-2

Published On 2018-04-13 08:06 GMT   |   Update On 2018-04-13 08:06 GMT
65-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கிய பாகுபலி-2 படம் 3 பிரிவுகளில் தேசிய விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது. #NationalAwards2018 #Baahubali2
புதுடெல்லி:

65-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் சிறந்த தமிழ் படமாக டூலெட் படமும், சிறந்த தெலுங்கு படமாக காஸி படமும் தேர்வு செய்யப்பட்டுள்ளது. சிறந்த மலையாள படமாக தொண்டிமுத்தலும் த்ரிக்சக்‌சியும் படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. 

ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரகுமான் 2 விருதுகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். சிறந்த நடிகராக ரித்தி சென்னும், சிறந்த நடிகையாக மறைந்த நடிகை ஸ்ரீதேவியும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 

எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா நடிப்பில் பாகுபலி படத்தின் தொடர்ச்சியாக வெளியான பாகுபலி-2 படம் 3 பிரிவுகளில் தேசிய விருதுக்கு தேர்வாகியுள்ளது. 



சிறந்த சண்டைப்பயிற்சி, ஸ்பெஷல் எபெக்ட்ஸ் மற்றும் சிறந்த பொழுதுபோக்கான திரைப்படம் உள்ளிட்ட 3 பிரிவுகளில் பாகுபலி-2 படம் விருது வென்றுள்ளது. #NationalAwards2018 #Baahubali2

Tags:    

Similar News