சினிமா

வடிவேலு, ரோபோ சங்கர், சூரிக்கு அப்பாவாக நடிக்கும் திண்டுக்கல் ஐ.லியோனி

Published On 2018-03-27 17:41 GMT   |   Update On 2018-03-27 17:41 GMT
பிரபல பட்டி மன்ற நடுவரும், மேடை பேச்சாளருமான திண்டுக்கல் ஐ.லியோனி, வடிவேலு, ரோபோ சங்கர், சூரி ஆகியோருக்கு அப்பாவாக நடிக்க இருக்கிறார்.
திரைப்பட நடிகரும், பட்டிமன்ற நடுவரும், மேடை பேச்சாளருமான திண்டுக்கல் ஐ.லியோனி ஒரு புத்தகம் எழுதி உள்ளார். இந்த புத்தகத்திற்கு திமுக செயல் தலைவரும், சட்ட மன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின், பேராசிரியர் சுப.வீரபாண்டியன், கவிஞர் பா.விஜய், யுகபாரதி ஆகியோர் அணிந்துரை வழங்கியுள்ளனர்.

லியானியின் பிறந்த நாளான இன்று இந்த புத்தகத்தின் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் புத்தகத்தை வெளியிட இயக்குனர் சீனுராமசாமி பெற்றுக் கொண்டார்.

அதன்பின் பேசிய லியோனி, ‘நான் நடித்த ஒரே திரைப்படம் ‘கங்கா கௌரி’. இதில் அருண் விஜய், வடிவேலுக்கு அப்பாவாக நடித்தேன். இந்த கதாபாத்திரம் எனக்கு மிகவும் பிடித்தது. பின்னர், ரஜினி நடிப்பில் வெளியான ‘சிவாஜி’ படத்தில் பட்டிமன்றம் ராஜா நடித்த கதாபாத்திரத்தில் என்னைத்தான் நடிக்க வைக்க அணுகினார்கள். நான் தான் மறுத்து விட்டேன். 

தற்போது, வடிவேலு என்னிடம் ஒரு கதை சொல்லியிருக்கிறார். அதில் வடிவேலு, ரோபோ சங்கர், சூரி ஆகியோர் அண்ணன் தம்பிகள். இவர்களுக்கு நான் அப்பாவாக நடிக்க வேண்டும் என்று கூறினார். மீண்டும் என்னுடன் நடிக்க வேண்டும் என்று நடிகர் வடிவேலு விருப்பம் தெரிவித்திருக்கிறார். அதுபோல், இயக்குனர் சீனு ராமசாமியும், அவர் இயக்கும் அடுத்த படத்தில் என்னை நடிக்க வைக்கிறேன் என்று கூறியிருக்கிறார்’ என்றார்.
Tags:    

Similar News