சினிமா

பார்த்திபன் மகள் கீர்த்தனாவுக்கு, அக்‌ஷய்யுடன் திருமணம் முடிந்தது

Published On 2018-03-08 06:31 GMT   |   Update On 2018-03-08 06:31 GMT
பார்த்திபன் மகள் கீர்த்தனாவுக்கும், பிரபல ஒளிப்பதிவாளர் ஸ்ரீகர் பிரசாத் மகன் அக்‌ஷய்க்கும் சென்னையில் வைத்து திருமணம் நடந்து முடிந்தது. #KeerthanaWedsAkshay #KeerthanaMarriage
நட்சத்திர தம்பதிகளான பார்த்திபன் - சீதா தம்பதிகளின் மகள் கீர்த்தனாவுக்கும், பிரபல தேசிய விருது படத்தொகுப்பாளர் ஸ்ரீகர் பிரசாத்தின் மகன் அக்‌ஷய்க்கும் சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் வைத்து திருமணம் நடந்து முடிந்தது. 

இவர்களது திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மற்றும் திரையுலகப் பிரபலங்கள் பலரும் பங்கேற்றுள்ளனர். 



கீர்த்தனா, மணிரத்னம் இயக்கிய கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து தேசிய விருது பெற்றவர். தற்போது மணிரத்னம் இயக்கும் படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றி வருகிறார். விரைவில் புதிய படத்தை இயக்க இருக்கிறார்.
 
இவருக்கும் பிரபல சினிமா எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத் மகன் அக்‌ஷய்க்கும் காதல் மலர்ந்தது. இவர்கள் திருமணத்துக்கு இரு வீட்டு பெற்றோர்களும் சம்மதம் தெரிவித்ததை அடுத்து சமீபத்தில் இவர்களது நிச்சயதார்த்தம் நடந்தது. இந்நிலையில், மகளிர் தினமான இன்று இவர்களது திருமணம் நடந்து முடிந்தது. #KeerthanaWedsAkshay #KeerthanaMarriage
 
Tags:    

Similar News