சினிமா
கண் அடித்து ரசிகர்களை கவர்ந்த பிரியா வாரியருக்கு எதிராக புகார்
`மாணிக்ய மலராய பூவி' என்ற பாடலில் கண் அடித்து ரசிகர்களை கவர்ந்த பிரியா வாரியருக்கு எதிராக ஐதராபாத் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. #ManikyaMalarayaPoovi #Priyawarrier #PriyaPrakashWarrier
சமீப காலமாகவே கேரள படங்களுக்கும், பாடல்களுக்கு தமிழ் சினிமா ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் ப்ரேமம் மலர் டீச்சர், ஜிமிக்கி கம்மல் ஷெரிலுக்கு பின்னர் தற்போது டிரெண்டாகி வருகிறார் பிரியா வாரியர்.
மலையாளத்தில் `ஹேப்பி வெட்டிங்', `சங்ஃஸ்' உள்ளிட்ட வெற்றிப்படங்களை இயக்கிய ஒமர் லூலு தற்போது `ஒரு அடாரு லவ்' என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், காதலர் தினத்தை முன்னிட்டு வீடியோ பாடல் ஒன்றை கடந்த பிப்ரவரி 9-ஆம் தேதி படக்குழு வெளியிட்டுள்ளது.
`மாணிக்ய மலராய பூவி' என தொடங்கும் அந்த பாடலை வினீத் ஸ்ரீனிவாசன் பாடியிருக்கிறார். ஒரு பள்ளியில் நடக்கும் கலை நிகழ்ச்சியின் போது மாணவர்கள் கூடியிருக்கின்றனர். அப்போது, தனது நண்பனை பார்த்து இரு புருவங்களையும் உயர்த்தியபடி பார்க்கும் பிரியாவின் பார்வை தான் சமூக வலைதளங்களில் தற்போது ட்ரெண்டாகி வருகிறது.
அதுமட்டுமில்லாமல் பிரியா வாரியருக்கென தற்போது ரசிகர் படையும் உருவாகியிருக்கிறது. தற்போது வரைக்கும் இந்த வீடியோவை 1 கோடிக்கும் மேற்பட்டோர் கண்டுகளித்துள்ளனர். மேலும் யூடியூப் டிரெண்டிங்கில் இந்த பாடல் முதலிடத்தில் உள்ளது.
இந்நிலையில், பிரியா வாரியருக்கு எதிராக ஐதராபாத் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ‘மாணிக்க மலராய பூவி’ பாடல் வரிகள் இஸ்லாமியர்களின் மனதை புண்படுத்துவதாக கூறி பிரியா வாரியர் மற்றும் இயக்குனர் மீது ஐதராபாத் நகர காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. #ManikyaMalarayaPoovi #Priyawarrier