சினிமா

இரும்புத்திரையின் அடுத்த கதவை திறந்து விடும் விஷால்

Published On 2018-01-18 06:44 GMT   |   Update On 2018-01-18 06:44 GMT
மித்ரன் இயக்கத்தில் விஷால், அர்ஜுன், சமந்தா நடிப்பில் உருவாகியுள்ள ‘இரும்புத்திரை’ படத்தின் அடுத்த கதவை திறந்து விடுகிறார் விஷால். #Irumbuthirai
‘துப்பறிவாளன்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து விஷால் அடுத்ததாக, பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் `இரும்புத்திரை’ படத்தில் நடித்து வருகிறார். இதில் விஷால் ஜோடியாக சமந்தா நடித்திருக்கிறார். அர்ஜுன் வில்லன் கதாபாத்திரத்திலும், ரோபோ ஷங்கர், வின்சன்ட் அசோகன், டெல்லி கணேஷ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர்.

இப்படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகி வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. இதையடுத்து படத்தின் பின்னணி வேலைகளில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், இப்படத்தின் ஆடியோ ரிலீஸ் தேதியை படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.



யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகி இருக்கும் இப்படத்தின் பாடல்களை ஜனவரி 20ம் தேதி வெளியிட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பர்ஸ்ட் லுக் மூலம் கதவை திறந்து வைத்த விஷால், சமீபத்தில் டீசரை ரிலீஸ் செய்தார். தற்போது ஆடியோ மூலம் அடுத்த கதவை திறந்து வைக்கிறார்.

விஷால் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பேக்டரி மூலம் தயாரித்துள்ள இப்படம் ஜனவரி 26-ம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு ரிலீசாகிறது.
Tags:    

Similar News