சினிமா

திட்டமிட்டபடி 22-ந்தேதி பாவனா திருமணம் நடக்கும்: சகோதரர் தகவல்

Published On 2018-01-17 08:22 GMT   |   Update On 2018-01-17 08:22 GMT
தமிழ் மற்றும் மலையாளத்தில் புகழ் பெற்ற நடிகை பாவனாவின் திருமணம் திட்டமிட்டபடி 22ம் தேதி நடக்கும் என்று அவரது சகோதரர் கூறியிருக்கிறார்.
மலையாளம், தமிழ் உள்பட பல மொழி சினிமாக்களில் நடித்துள்ளவர் பிரபல நடிகை பாவனா. இவர் கன்னட சினிமாவில் நடித்தபோது தயாரிப்பாளர் நவீனுடன் காதல் மலர்ந்தது. அவர்கள் இருவரும் முதலில் தங்கள் காதலை ரகசியமாக வைத்திருந்தனர். இவர்கள் காதல் தொடர்பாக கிசு கிசு வெளியான பிறகு தங்கள் காதலை ஒத்துக்கொண்டனர்.

இதைதொடர்ந்து நடிகை பாவனா மற்றும் தயாரிப்பாளர் நவீன் குடும்பத்தினர் சம்மதத்துடன் இவர்கள் திருமணத்தை நடத்த ஏற்பாடுகள் நடைபெற்றது.

கடந்த மார்ச் மாதம் நடிகை பாவனா - நவீன் நிச்சயதார்த்தம் திருச்சூரில் மிகவும் எளிமையாக நடந்தது. நெருங்கிய உறவினர்கள் மட்டுமே இதில் பங்கேற்றனர். நிச்சயதார்த்தத்தை தொடர்ந்து அவர்கள் திருமணத்தை விரைவில் நடத்த இருவீட்டாரும் திட்டமிட்டனர். கடந்த ஆண்டு இறுதிக்குள் திருமணம் நடத்தவும் ஏற்பாடுகள் நடந்தன.



ஆனால் நவீனின் தாயார் மரணம் போன்ற சில காரணங்களால் இவர்கள் திருமணம் தள்ளிப்போனது.

இந்த நிலையில் நடிகை பாவனா - நவீன் திருமணம் திருச்சூரில் வருகிற 22-ந்தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்த தேதியிலும் திருமணம் நடைபெறாது என்று சமூக வலை தளங்களில் பரபரப்பு தகவல்கள் வெளிவந்தன.

ஆனால் இதை நடிகை பாவனாவின் சகோதரர் ராஜேஷ் மறுத்துள்ளார். ஏற்கனவே திட்டமிட்டபடி திருச்சூரில் 22-ந்தேதி காலை பாவனா திருமணம் நடைபெறும் என்றும், அன்று மாலை திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறும் என்றும் அவர் தனது பேஸ்புக்கில் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News