சினிமா

விஷால் ஒரு குளத்து ஆமை: ராதா ரவி காட்டம்

Published On 2017-12-05 08:40 GMT   |   Update On 2017-12-05 08:41 GMT
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்கு தயாரிப்பாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், தயாரிப்பாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து பேசிய ராதாரவி விஷால் ஒரு குளத்து ஆமை என்று திட்டினார்.
நடிகர் விஷால் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் தலைவராக இருக்கிறார். நடிகர் சங்கத்திலும் பொதுச்செயலாளராக பதவி வகிக்கிறார். அவர் ஆர்.கே.நகர் சட்டமன்ற இடைத்தேர்தலில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடுவதற்கு தயாரிப்பாளர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

அத்துடன் சென்னை அண்ணா சாலையில் உள்ள தயாரிப்பாளர்கள் சங்க அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அவர்கள் விஷால் ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தேர்தலில் போட்டியிடும் விஷால் தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் பதவியை ராஜினாமா செய்யவேண்டும். அதுவரை சங்க அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தப்படும் என்றும் தயாரிப்பாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



இந்நிலையில், தயாரிப்பாளர்களின் இந்த போராட்டத்திற்கு நடிகர் ராதா ரவி, ராதிகா சரத்குமார் உள்ளிட்டோர் நேரில் ஆதரவு தெரிவித்துள்ளனர். இதில் ராதா ரவி பேசும் போது,

விஷால் ஒரு குளத்து ஆமை மாதிரி, நல்ல இடமாக இருந்தால் அங்கு சென்று அந்த இடத்தை கெடுத்துவிடுவார். அரசியல் ரொம்ப கஷ்டமானது. எனவே தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு தேவையானவற்றை அவர் செய்ய வேண்டும் என்பதே விஷாலுக்கு தனது அறிவுரை என நடிகர் ராதாரவி தெரிவித்தார்.


Tags:    

Similar News