சினிமா

திருமணத்துக்கு பிறகு புதிய திரை பயணத்தை தொடங்கி இருக்கிறேன் - சமந்தா

Published On 2017-11-20 09:03 GMT   |   Update On 2017-11-20 09:03 GMT
தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா, திருமணத்துக்கு பிறகு புதிய திரை பயணத்தை தொடங்கி இருப்பதாகக் கூறியிருக்கிறார்.
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருப்பவர் சமந்தா. திருமணத்துக்கு முன்பு விஜய் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்த அவர், இப்போது விஷால், சிவகார்த்திகேயன் படங்களில் நடித்து வருகிறார்.

திருமணத்தையொட்டி சிறிது ஓய்வு எடுத்த சமந்தா, திருமணத்துக்குப் பிறகு மீண்டும் பிசியாக நடிக்கத் தொடங்கிவிட்டார். இது பற்றி கூறிய அவர்...

“நான் தற்போது எனது வாழ்வில் ஒரு நடிகையாக ஒரு அற்புதமான திரை பயண அத்தியாயத்தை தொடங்கி இருக்கிறேன். திருமணத்துக்கு முன்பு ‘கத்தி’, ‘தெறி’, ‘பத்து எண்ணுறதுக்குள்ள’ உள்பட பல நல்ல படங்களில் நடித்தேன்.



அதுபோல், இனியும் என் திறமையை வெளிப்படுத்தும் அழுத்தமான கதாபாத்திரங்களில் நடிக்க ஆர்வமாக இருக்கிறேன். அழகான, அழுத்தமான கதைகள் மூலம் எனது நடிப்பாற்றலை முழுமையாக வெளிப்படுத்த விரும்புகிறேன்” என்று தெரிவித்து இருக்கிறார்.

Tags:    

Similar News