சினிமா

வைபவியை தாய்லாந்து அழைத்து செல்லும் கௌதம் கார்த்திக்

Published On 2017-11-13 11:05 GMT   |   Update On 2017-11-13 11:05 GMT
ஹர ஹர மஹாதேவகி படத்தின் வெற்றியை தொடர்ந்து, வைபவியுடன் நடித்து வரும் கௌதம் கார்த்திக், அவரை, தாய்லாந்து அழைத்து செல்ல இருக்கிறார்.
‘ஹரஹர மஹாதேகவி’ வெற்றிப்படத்திற்குப் பிறகு நடிகர் கௌதம் கார்த்திக், இயக்குனர் சந்தோஷ் பி.ஜெயக்குமார் கூட்டணியில் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படம் உருவாகி வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த அக்டோபர் மாதம் துவங்கியது.

இதில் ‘சர்வர் சுந்தரம்’ மற்றும் ‘சக்கப்போடு போடு ராஜா’ படத்தில் நடித்துள்ள வைபவி ஷாண்டில்யா கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் சந்த்ரிகா ரவி மற்றும் யாஷிகா ஆனந்த் ஆகியோரும் நடித்துள்ளனர். சந்த்ரிகா இந்த படத்தில் பேயாக வருகிறார். யாஷிகா முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

தாய்லாந்தில் முதற்கட்டப் படப்பிடிப்பை முடித்துவிட்டு சமீபத்தில் படக்குழு சென்னைக்குத் திரும்பியது. தற்போது சென்னையில் ஒரு பாடலுக்கான படப்பிடிப்பு நடைப்பெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து மீண்டும் தாய்லாந்திற்கு இறுதிக்கட்டப் படப்பிடிப்பிற்காக இக்குழு செல்ல உள்ளது.

இந்தப்படத்தில் ராஜேந்திரன், கருணாகரன், பால சரவணன், மதுமிதா, மீசைய முறுக்கு புகழ் ஷா ரா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 2018ஆம் ஆண்டு துவக்கத்திலேயே ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படத்தை வெளியிட படக்குழுவினர் திட்டமிடப்பட்டுள்ளனர்.
Tags:    

Similar News