சினிமா

ரசிகர்களை உற்சாகப்படுத்திய நயன்தாரா

Published On 2017-11-12 08:20 GMT   |   Update On 2017-11-12 08:20 GMT
அறம் படம் ஓடும் திரையரங்குகளுக்கு சென்று ரசிகர்களுடன் படம் பார்த்து அவர்களை உற்சாகப்படுத்தி இருக்கிறார் நயன்தாரா.
நயன்தாரா நடிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் படம் ‘அறம்’. கோபி நயினார் இயக்கியுள்ள இப்படத்தை கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. ட்ரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் வெளியிட்டது. இப்படம் கடந்த வெள்ளிக்கிழமை உலகமெங்கும் வெளியானது.

இப்படத்துக்கு விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பு கிடைத்திருக்கிறது. 'அறம்' படத்தில் நடித்ததிற்காக நயன்தாராவுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. பல சினிமா பிரபலங்களும், திரைப்பட விமர்சகர்களும், ரசிகர்களும் படத்தை பாராட்டி வருகின்றனர்.

இப்படத்தை மேலும் பிரபலமாக்க முதல் முறையாக, 'அறம்' திரையிடப்பட்டுள்ள சென்னை திரையரங்குகளுக்கு நேரடியாக சென்று வருகிறார் நயன்தாரா. சென்னை காசி திரையரங்கம் மற்றும் கமலா திரையரங்குகளுக்கு சென்று, படம் பார்த்தவர்களை உற்சாகப்படுத்தி இருக்கிறார்.

காசி திரையரங்கிற்கு வந்த நயன்தாராவை படக்குழுவினர் வரவேற்றனர். சுமார் 10 நிமிடங்கள் வரை அங்கு படம் பார்த்தவர்கள் மத்தியில் இருந்தார். பிறகு அங்கிருந்து புறப்பட்டு மற்ற திரையரங்குகளுக்கு சென்றார். நயன்தாராவை பார்த்த ரசிகர்கள் உற்சாகத்தில் திகைத்தனர்.

முதன் முறையாக தன் படத்தை விளம்பரப்படுத்தும் முடிவில் நயன்தாரா களமிறங்கியிருப்பது தயாரிப்பாளர்களை பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
Tags:    

Similar News