சினிமா

அமாவாசைக்கும் பௌர்ணமிக்கும் இடையே காதல்

Published On 2017-11-05 05:56 GMT   |   Update On 2017-11-05 05:56 GMT
அமாவாசை அன்று பிறந்த நாயகனுக்கும், பெளர்ணமி அன்று பிறந்த நாயகிக்கும் இடையே காதலை சொல்லும் ‘143’ படம் இம்மாதம் வெளியாக இருக்கிறது.
ஐ டாக்கிஸ் என்ற பட நிறுவனம் சார்பாக சதீஷ் சந்திரா பாலேட் தயாரிக்கும் படத்திற்கு ‘143’ என்று பெயரிட்டுள்ளார். காதலர்களின் வழக்கமாக கூறும், I LOVE YOU என்கிற வார்த்தைகளின் சுருக்கமே 143. இந்த டைட்டில் இது வரை இன்றைய தலைமுறை இயக்குனர்களால் கண்டு கொள்ளப்படாமல் விட்டிருப்பது ஆச்சர்யம் தான். அதை பிடித்துக் கொண்டார் இயக்குனர் ரிஷி. இப்படத்தை அவரே கதாநாயகனாக நடித்து எழுதி இயக்கி இருக்கிறார்.

நாயகிகளாக பிரியங்கா ஷர்மா, நட்சத்திரா இருவரும் அறிமுகமாகிறார்கள். அனுபவ நடிகர்களான விஜயகுமார், கே.ஆர்.விஜயா ஆகியோர் முக்கிய கதாபாத்திரம் ஏற்றிருக்கிறார்கள். மற்றும் சுதா, ராஜசிம்மன் பிதாமகன் மகாதேவன், நெல்லைசிவா இவர்களுடன் சதீஷ் சந்திரா பாலேட் முக்கிய வேடம் ஏற்றிருக்கிறார். ஆர்.பி.எம். சினிமாஸ் ராகுல் இப்படத்தை தமிழகம் முழுவதும் வெளியிடுகிறார்.

படத்தைப் பற்றி இயக்குனர் ரிஷி கூறும்போது, ‘காதல், காமெடி, பேமிலி சென்டிமென்ட் கலந்த ஒரு கலவைதான் இந்த 143. காதல் படம் என்றாலே ரசிகர்களிடையே ஒரு தனி ரசனை இருக்கும், அப்படி ரசிக்கும் படியான காதல் கதை தான் இது. கிராமத்து பின்னணியிலும், நகரத்து பின்னணியிலும் திரைக்கதை நகரும். எனக்கு அப்பாவாக விஜயகுமார் நடித்திருக்கிறார். அந்த அப்பா சென்டிமென்ட் காட்சிகள் அனைத்து இளைஞர்களுக்கும் நிச்சயம் பிடிக்கும்.

அமாவாசை அன்று பிறந்த நாயகன் கார்த்திக் (ரிஷி), பெளர்னமி அன்று பிறந்த நாயகி மது (பிரியங்கா ஷர்மா) இவர்கள் காதலுக்கு வில்லனாக சூரியன் (ராஜசிம்மன்). இப்படி மூன்று கதாபாத்திரங்களின் ஓட்டமே இந்தப்படத்தின் திரைக்கதை ஒரு வித்தியாசமான உணர்வை ஏற்படுத்தும். படம் இம்மாதம் 10 ம் தேதி வெளியாகிறது’ என்றார்.
Tags:    

Similar News