சினிமா

சினிமா கேளிக்கை வரி விவகாரத்தில் இன்று நல்ல முடிவு வரும்: விஷால் நம்பிக்கை

Published On 2017-10-12 03:58 GMT   |   Update On 2017-10-12 03:58 GMT
சினிமா கேளிக்கை வரி விவகாரத்தில் இன்று நல்ல முடிவு எட்டப்படும் என்று நடிகர் விஷால் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
சினிமா படங்கள் தொடர்பான கேளிக்கை வரியை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்று தமிழக அரசிடம் சினிமா திரையுலகத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுதொடர்பாக தமிழ்நாடு சினிமா தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் விஷால், தமிழ்நாடு திரையரங்குகள் உரிமையாளர் சங்கத் தலைவர் அபிராமி ராமநாதன் உள்பட சினிமாத் துறையை சேர்ந்தவர்கள், செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி ஆகியோருடன் நேற்றுமுன்தினம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

தலைமைச் செயலகத்தில் நேற்றும் பேச்சுவார்த்தை தொடர்ந்தது. சுமார் ஒரு மணி நேரம் நடந்த பேச்சுவார்த்தைக்குப் பின்னர் நிருபர்களுக்கு விஷால் அளித்த பேட்டி வருமாறு:-

இரண்டாம் நாள் பேச்சுவார்த்தை நடந்து முடிந்தது. தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளது. இதில் இன்னும் முடிவு எட்டப்படவில்லை. நாளைக்குள் (12-ந் தேதி) தீர்வு வரும் என்று நம்புகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News