சினிமா

மீண்டும் டுவிட்டர் பக்கம் திரும்பினார் ஓவியா

Published On 2017-08-28 13:02 GMT   |   Update On 2017-08-28 13:02 GMT
பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய ஓவியா மீண்டும் தனது சமூகவலைத்தளமான ட்விட்டர் பக்கத்திற்கு திரும்பியுள்ளார்.
தனியார் தொலைக்காட்சி நடத்தும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ரசிகர்களை அதிகம் கவர்ந்தவர் ஓவியா. இந்நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய உடனே, தனது சமூகவலைத்தளத்தில் கூட ட்வீட் எதுவுமே செய்யாமல் ஓய்வில் இருந்தார். கொச்சியிலிருந்தபடியே வீடியோ பதிவு ஒன்றை மட்டும் சில தினங்களுக்கு முன்பு வெளியிட்டார்.


இந்நிலையில் ஓவியா மீண்டும் தனது ட்விட்டர் தளத்திற்கு திரும்பியுள்ளார். சமூகவலைத்தளத்தில் பலரும் அவருக்கு வரவேற்பு தெரிவித்து வருகிறார்கள். தனது முதல் டுவிட்டாக, ‘உங்கள் ஒவ்வொருவரிடமிருந்து பெறும் அன்புக்கும் அக்கறைக்கும் என்னிடம் வர்ணிக்க வார்த்தைகள் இல்லை. நான் என்னை ஆசிர்வதிக்கப்பட்டவராக உணர்கிறேன், மிக்க நன்றி, உங்கள் அனைவரின் அன்பினாலும் எனக்கு மேலும் பொறுப்பு அதிகரித்துள்ளது.

இவ்வாறு ஓவியா தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News