சினிமா

இறுதிச்சுற்று இயக்குனருடன் கைகோர்க்கும் சூர்யா?

Published On 2017-06-29 08:02 GMT   |   Update On 2017-06-29 08:03 GMT
இறுதிச்சுற்று படத்தை இயக்கிய சுதா. கே.பிரசாத் இயக்கத்தில் சூர்யா நடிக்கப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
மாதவன்-ரித்திகா சிங் நடிப்பில் கடந்த வருடம் வெளிவந்த ‘இறுதிச்சுற்று’ படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. குத்துச்சண்டையை மையமாக வைத்து வெளிவந்த இப்படத்தை சுதா கே.பிரசாத் இயக்கியிருந்தார். இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து எந்த படத்திலும் கமிட்டாகாமல் இருந்து சுதா தற்போது சூர்யாவை வைத்து அடுத்த படத்தை இயக்கப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

சூர்யா தற்போது ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தில் பிசியாக நடித்து வருகிறார். விக்னேஷ் சிவன் இயக்கும் இப்படத்தை தொடர்ந்து ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் செல்வராகவன் இயக்கும் புதிய படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். இந்நிலையில், சுதாவிடம் சமீபத்தில் சூர்யா கதை ஒன்றை கேட்டதாகவும், அந்த கதை சூர்யாவுக்கு பிடித்துப் போய்விட்டதாகவும் கூறப்படுகிறது.



இதற்கிடையில், சிவகார்த்திகேயனிடமும் சுதா ஒரு கதையை சொல்லி ஓகே வாங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. எனவே, அடுத்ததாக சுதா யாரை வைத்து இயக்கப் போகிறார் என்பது அவர் வாய் திறந்து சொன்னால்தான் இதுகுறித்த உண்மையான தகவல்கள் வெளிவரும் என தெரிகிறது. 
Tags:    

Similar News